எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.13- தாய், சேய் நலம் காப்பதில் தமிழகம் முதலிடமாக திகழ்கிறது என்றும், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 28,596 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே என்று குழந்தைகளைப் பற்றி பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர். சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை எவ்வித இடர்ப்பாடும் இன்றி பெற்று மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே வளமான மற்றும் வலிமையான தலைமுறையினராக உருவாகின்றனர்.
தமிழகத்தில் உள்ள, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2002 ஆம் ஆண்டு எனது அரசால் செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில், ஒரு புதிய கொள்கை வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பல உதவிகள் வழங்கப்படுகின்றன. 6 மாதம் முதல் 36 மாதம் முடிய உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு வழங்குதல், 2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தல், முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு மதிய உணவு அளித்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், உயர் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைத்தல், பள்ளிசாரா முன்பருவக் கல்வி அளித்தல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளித்தல், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைக் கல்வி வழங்குதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வருடத்தில் 300 நாட்களுக்கு செரிமானத் தன்மை அமிலேஸ் நிறைந்த இணை உணவு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், பல்வேறு நிலையில் உள்ள பயனாளிகளுக்கு இணை உணவு வழங்க 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், புரதச் சத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு அனைத்து மையங்களிலும் வருடத்தில் 365 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோர்களுக்கு சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு குழந்தைகள் மையத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறும் குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும்; மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும்; எனது அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறிய பழுதுகளுடன் உள்ள 10,372 மையங்கள் மற்றும் பெரிய பழுதுகளுடன் உள்ள 7,449 மையங்கள், ஆக, பழுதுபட்டுள்ள மொத்தம் 17,821 மையங்களும் இந்த ஆண்டே 47 கோடியே, 61 லட்சம் ரூபாய் செலவில் பழுது நீnullக்கி சீரமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் மையங்களுக்கு, ஆர்வமுடன் குழந்தைகள் வருவதற்கும்; விளையாட்டு சாதனங்கள் வாயிலாக முன்பருவக் கல்வி பயில்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இம்மையங்களில் கோடைக் காலத்தில் வெப்பத்தினாலும்; மழை மற்றும் குளிர் காலங்களில் போதிய வெளிச்சம் இன்மையாலும் குழந்தைகள் அவதியுறாமல் இருக்கும் வகையில், மின்விசிறி மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர எனது அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மின்வசதி இல்லாத 45,345 குழந்தைகள் மையங்களில், 27 கோடியே, 21 லட்சம் ரூபாய் செலவில், உட்புற மின் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன் மின் விசிறி மற்றும் மின் விளக்கு ஆகியவை பொருத்தப்படும்.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணவும்; குழந்தைகளிடம் இளம் வயதிலேயே கழிப்பறையைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கவும்; குழந்தைகள் மையங்களில் குழந்தை நேயக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். இக்கழிப்பிடங்கள், குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் வடிவமைக்கப்படும். இதற்காக, இந்த ஆண்டு 23 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் 29,727 குழந்தைகள் மையங்களில் குழந்தைகள் நேயக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 28,596 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு, எனது அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளாலும்; செயல்படுத்தி வரும் திட்டங்களாலும்; தாய், சேய் நலம் காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ள
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
22 Apr 2024புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்., புகார்
22 Apr 2024புதுடில்லி, ராஜஸ்தானில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.