முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று பேசுகிறார் 1000 பெண்களுக்கு நலத்திட்டஉதவிகள்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,செப்.- 16 - அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 1000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.    மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 1ம் பகுதி அதிமுக சார்பில்  பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை அண்ணாநகர் சுகுணாஸ்டோர் எதிரில் இன்று மாலை 6 மணி அளவில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு வடக்கு 1 ம் பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன் தலைமை வகிக்கிறார். கூட்டத்திற்கு வட்ட செயலாளர்கள் ஏ.முத்துசாமி, எஸ்.போஸ், ஆர்.மூர்த்தி, என்.தங்கபாண்டி, கே.வி.கே.கண்ணன், கே.எம்.கண்ணன், ஏ.கார்த்திக் முனியசாமி, டி.ராமன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்கள்.  கூட்டத்தில் மாணவரணி மாநில செயலாளரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 1000 பெண்களுக்கு எவர்சில்வர் பானைகளை வழங்கி பேரறிஞர்அண்ணா பிறந்தநாள் விழா சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, மற்றும் முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். கூட்ட முடிவில் பகுதி பேரவை இணை செயலாளர்கள் மானகிரி எம்.மகாதேவன், எம்.என்.ரகு ஆகியோர் நன்றியுரையாற்றுகிறார்கள். இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 1 ம் பகுதி கழக நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்