எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.செப்.- 17 - இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் லோட்டஸ் இராமசாமி தெருவில் நேற்று நடைப்பெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும்,சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் வழங்கி சிறப்புறையாற்றினார். பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அப்போது பேசியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதை உணர்ந்த பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும் பல்வேறு திட்டங்களை 10 ஆண்டுக்கால பொற்கால ஆட்சிக் காலத்தில் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இன்றைக்கும், என்றைக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் கிராமப்புற, நகர்ப்புற இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்க உத்தரவிட்டு, சென்னையில் முதல் தொகுதியாக இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் செயலாக்கம் செய்த தமிழக முதலமைச்சருக்கு இத்தொகுதி மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1859 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே, ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 987 மதிப்பீட்டில் மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது. ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்படும் இலவச பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 5,443.78/- ஆகும். இதன் முதல் கட்டமாக நேற்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 720 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 39.19 இலட்சம் மதிப்பீட்டில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் நேற்று வழங்கப்பட்டது. மேலும், தமிழக முதலமைச்சர் அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கலைக்கல்லுரிகள், தொழில் நுட்ப கல்லுரிகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்தில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட சென்னை பள்ளியில் 12ஆம் வகுப்பில் பயிலும் 42 மாணவ, மாணவியர்களுக்கு மொத்தம் ரூபாய் 5 இலட்சத்து, 91 ஆயிரம் மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது என்றார்.
மேலும் தெரிவிக்கும்போது, 14-வது சட்டமன்றத் தொடரில் சமூக நலன், ஆதிதிராவிடர் நலன், மீனவர் நலன், தொழிலாளர் நலன், நெசவாளர் நலன் போன்ற அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 25 இலட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்கும் வகையில் ரூபாய் 1250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதைப் போல் மடிக்கணினி 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 9.12 இலட்சம் பேர் பயன்பெறும் வகையில் ரூபாய் 912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
சென்னை, அண்ணாசாலையில் புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போன்று பல்வகை சிறப்பு மருத்துவமனை அமைய உள்ளதால் வடசென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.
சிறப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களை இல்லத்தரசிகள் வெகுவாக பயன்படுத்த வேண்டும் என்கிற வகையிலும், மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பொருட்களில் ரகசிய குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்களுடைய உபயோகத்திற்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கல்வி புரட்சி, பொருளாதார புரட்சி, இல்லத்தரசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட திட்டங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.
சென்னை மாநகராட்சி, ஆணையர் பேசுகையில், தமிழக முதல்வர் இராயபுரம் தொகுதிக்கு சிறப்பு திட்டங்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உடன், வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய பெண்கள் சமையல் பொருட்களை அரைப்பதற்கு வசதியில்லாமல் பக்கத்து வீட்டில் கடன் கேட்டு அரைப்பார்கள். இன்றைக்கு மகளிர்களுக்கு சுயமரியாதை கூட்டும் வகையில் முதல்வர் சிறப்பு திட்டங்களின் கீழ் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏற்றம் பெற மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றார்.
இவ்விழாவில் இணை ஆணையர் ( கல்வி ) தி.ந.வெங்கடேஷ், நா.பாலகங்கா, எம். பி. பி. வெற்றிவேல், எம்.எல்.ஏ., மன்ற உறுப்பினர் ச.மீனா, மண்டல அலுவலர் nullமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் சட்டப் பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் இயராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நேற்று ( 16.9.2011) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இணை ஆணையர் ( கல்வி )தி.ந.வெங்கடேஷ், நா. பாலகங்கா, எம்.பி. பி.வெற்றிவேல், எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024