முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயா கல்லூரி விவகாரம்: அழகிரி குடும்பத்தினருக்கு புதிதாக நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 18 - மதுரை அருகே உள்ள தயா பொறியியல் கல்லூரி மீதான பாசனக்குளம் ஆக்கிரமிப்பு புகாரில் மாவட்ட கலெக்டர் அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெறவும், கலெக்டர் புதிதாக நோட்டீஸ் அனுப்பவும் அனுமதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தயா பொறியியல் கல்லூரிக்கான வளாகத்தில் பாசனக்குளம், கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து மதகுகளை சேதப்படுத்தியதாக எம். ராமலிங்கம் என்ற விவசாயி மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். இதையொட்டி கலெக்டர் அனுப்பிய நோட்டீசில் காந்தீய கருத்துக்களை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் கடந்த 16 ம் தேதி கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் அரசியல் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளதது. ஆதராமற்ற ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து அதை ரத்து செய்யுமாறு மு.க. அழகிரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசு தரப்பில் கலெக்டர் நோட்டீசை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு புகார் குறித்து விளக்கம் கேட்டு சட்டத்துக்குட்பட்டு புதிதாக நோட்டீஸ் அனுப்ப கலெக்டருக்கு உரிமை உண்டு. இந்த நோட்டீசை மனுதாரர் தரப்பினர் சட்டப்படி எதிர்கொள்ளலாம் என்று மனுவை தள்ளுபடி செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்