முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நடந்த சண்டையில் 10 தீவிரவாதிகள் உள்பட 15 பேர் பலி

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப்.- 19 - பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த சண்டை ஒன்றில்  10 தீவிரவாதிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில்  கைபர் ஏஜன்சி என்ற இடத்தில் பாரா என்ற பகுதியில்  உள்ள ஒரு செக்போஸ்ட்டின் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதை அடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மலைஜாதி மக்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். செக்போஸ்டின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது  மலை ஜாதி மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே சில மணி நேரம்  சண்டை  நீடித்தது.

இந்த  சண்டையில் 10 தீவிரவாதிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மலைஜாதி மக்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு படையினரும் இந்த சண்டையில் ஈடுபட்டனர்.  ஒரு ராணுவ வீரரும், 4 துணை ராணுவ வீரர்களும் இந்த சண்டையில் பலியானார்கள்.  தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சில தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த மோதலில் படுகாயம் அடைந்த மலைஜாதி மக்கள் சிலர்  பெஷாவர் நகரில்  உள்ள  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில்  பாதுகாப்பு வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்