முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஜ்மீர் தர்ஹாவில் ஜனாதிபதி பிரதீபா

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஆஜ்மீர், செப்.20 - ஆஜ்மீர் தர்ஹாவில் ஜனாதிபதி பிரதீபா பிரார்த்தனை செய்தார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 3 நாள் பயணமாக நேற்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்தார். அவர் ஆஜ்மீரில் உள்ள  புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் தர்ஹாவுக்கு விஜயம் செய்தார். அவருடன் ராஜஸ்தான் கவர்னர் சிவராஜ் பாட்டீல்,  ஆஜ்மீர் எம்.பி. சச்சின் பைலட் ஆகியோரும் சென்றிருந்தனர். ஆஜ்மீர் தர்ஹாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை கவுரவிக்கும் வகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுமார் 30 நிமிடம் தர்ஹாவில் இருந்த பிரதீபா பாட்டீல் தர்ஹாவுக்கு சில நன்கொடைகளை வழங்கினார்.

நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக தான் தர்ஹாவில் பிரார்த்தனை செய்ததாகவும் அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தான் வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி பாட்டீல் தனது சிற்றுரையில் குறிப்பிட்டார்.

பிரதீபா பாட்டீலுக்கு தர்ஹாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையின்போது சிறப்பு இசைக்கருவிகளில் ஓசைகள் எழுப்பப்பட்டன.

ஆஜ்மீர் தர்ஹாவின் வரலாறு மற்றும்அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறப்பட்டது. அவற்றை அவர் மிகுந்த ஆர்வத்துடன்  கவனித்து கேட்டுத்  தெரிந்து கொண்டார். ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்