முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ரயில் விபத்தில் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,செப்.20 - அரக்கோணம் ரயில் விபத்தை போல் இலங்கையிலும் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பிரான்சு நாட்டு சுற்றுலாப் பயணி உட்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். கொழும்பு - கண்டி நகரங்களுக்கு இடையே செல்லும் ரயில் ஆல்வா ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது அதே தடத்தில் வந்த மற்றொரு ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறம் மோதியது. இதில் நின்று கொண்டிருந்த ரயிலின் சில பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. பின்புறம் வந்து மோதிய ரயிலின் என்ஜின், சில பெட்டிகள் சேதமடைந்தன. இந்த ரயிலின் டிரைவர், துணை டிரைவர் மற்றும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

இந்த ரயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை அனுராதபுரத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கில் சென்று கொண்டிருந்த ரயில் மீது லாரி மோதியதில் அந்த லாரியின் டிரைவர் உயிரிழந்தார். இது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்