முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக் காதல்: பள்ளி மாணவி உட்பட 3 பேர் தற்கொலை

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி செப். 21 - விளாத்திகுளத்தில் கள்ளக்காதலைக் கண்டித்ததால் காதலன், காதலி, மகள் ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விளாத்திகுளம், சிதம்பரநகரைச் சேர்ந்தவர் பொன்மாடசாமி (27). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமதி (21) என்ற மனைவியும் மகராஜன் (3), மதுபாலா (2) எனற குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஐயம்மாள் (30) என்ற கட்டிட தொழிலாளிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

முத்துகிருஷ்ணன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் அவர் பொன்மாடசாமியுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இதனை பொன்மாடசாமியின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஊரார் கேலி பேசி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வீட்டைவி?ட்டுச் சென்ற பொன்மாடாசாமி காலையில் வீடு திரும்பவில்லை என்று கவலையடைந்த திருமதி ஐயம்மாள் வீட்டிற்கு தனது கணவர் சென்றிருக்கலாம் என கருதி தேடி வந்தார்.

அப்போது ஐயமாளின் வீட்டிற்குள் ஒரே கட்டிலில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பொன்மாடசாமி, ஐயம்மாள், ஐயம்மாளின் மகள் அழகு லட்சுமி (11), மகன் பாலமுருகன் (6) ஆகிய 4பேரும் கிடந்தனர். இதனால் திருமதி விளாத்திகுளம் போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சாகுல்ஹமீது வந்து விசாரணை நடத்தினார். இதில், ஐயம்மாள், பொன்மாடசாமி, அழகு லட்சுமி மூவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவ்நதது.

உயிருக்கு போராடிய சிறுவன் பாலமுருகனை போலீசார் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூவரது உடலும் பிரதே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்காதல் பிரச்சனையில் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துள்ள இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்