முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு புகாரில் தி.மு.க. கவுன்சிலர் கோர்ட்டில் சரண்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.21 - நில அபகரிப்பு புகார் தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர் சின்னான் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார். 

மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தை தி.மு.க. கவுன்சிலர் சின்னான் மற்றும் அவரது மகன் செந்தமிழ்செல்வன் ஆகியோர் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. 

புகாரின்பேரில்  குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னான் மகன் செந்தமிழ் செல்வனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னான் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சின்னானுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நேற்று காலை மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி, தி.மு.க. கவுன்சிலர் சின்னான் தினமும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் உத்தரவு வழங்கினார்.  பின்னர் கவுன்சிலர் சின்னான் நிபந்தனை ஜாமீன் உத்தரவு நகலை பெற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்