முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை,செப்.22 - அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்த திமுக நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் குஷ்பு பிரசாரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் குஷ்பு உள்பட 9 பேர் மீது ஆண்டிப்பட்டி போலீசாரும், குஷ்பு உள்பட 3 பேர் மீது பழனிசெட்டிப்பட்டி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் குஷ்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மாலா முன்னிலையில் நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராமர் ஆஜராகி ஆண்டிப்பட்டியில் அனுமதியில்லாமல் தேர்தல் பிரசாரம் செய்த வழக்கில் குஷ்பு உள்பட 9 பேர் மீதும் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றார். ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் குஷ்பு சரண் அடைந்து  ஜாமீனில் செல்லலாம் என்றும் பழனிச்செட்டிப்பட்டி வழக்கில் முன்ஜாமீன் வழங்கியும் நீதிபதி மாலா உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்