முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் 450 லிட்டர் மண்ணென்ணை பறிமுதல்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

போடி செப்.23 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூரி;ல் மண்ணென்ணெய் பதுக்கி வைத்து கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 450 லிட்டர் மண்ணென்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது.போடிநாயக்கனுனூர், புதூர் பகுதியில் குடியிருக்கும் ராமசாமி மகன் முருகன் என்பவர், போடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பாலடைந்த கட்டிடத்தில் பெரிய கேன்களில் ஏதோ பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது சுமார் 50 லிட்டர் அளவுடைய 9 கேன்களில் மொத்தம் சுமார் 450 லிட்டர் மண்ணென்ணெய் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 450 லிட்டர் மண்ணென்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மண்ணென்ணெயும் அதனை பதுக்கி வைத்திருந்த முருகன் என்பவரையும், போடி நகர் காவல்துறையினர், உத்தமபாளையம் குடிமை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்