முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. விற்கு ஆதரவு: கொங்கு தமிழர் கட்சி அறிக்கை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, செப்.24 - தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. விற்கு ஆதரவு தொடரும் என்று கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே. தீரன்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,  எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் அமுல்படுத்திய தமிழக முதல்வருக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 14.09.2011 தேதியில் கொங்கு தமிழர் செயற்குழு கூடிய போது அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும், 2001 முதல் 2010 வரை நடைபெற்ற நான்கு பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள், நடந்த முடிந்த சட்டசபை தேர்தல் போன்றவற்றில் அ.தி.மு.க வை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளோம்.  

எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா காலம் வரை கொங்கு தமிழகத்திற்கு தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். மேலும் தமிழக அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வழங்கி கெளரவித்தார் முதல்வர். 

அவருக்கும், அமைச்சர்கள் மற்றும் ஏனையோருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில், எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஆதரித்து 12 மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவது என்று கொங்கு தமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்