முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மேற்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். - 27 - திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் பணியாற்ற 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அமைச்சர் மரியம் பிச்சை மறைவடைந்ததையொட்டி திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பரஞ்ஜோதியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இவர் முன்பு ஸ்ரீரங்கம தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கடந்த முறை முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது தேர்தல் பொறுப்பாளராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் பணியாற்ற தற்போது தேர்தல் பணிக்குழுவுக்காக 16 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு:-

1.ஓ.பன்னீர்செல்வம், 2.கே.ஏ.செங்கோட்டையன், 3.நத்தம் விஸ்வநாதன், 4.கே.பி.முனுசாமி, 5.ஆர்.வைத்தியலிங்கம், 6.செல்லூர் ராஜூ, 7.கோகுல இந்திரா, 8.பி.வி.ரமணா, 9.ஆர்.பி.உதயகுமார், 10.ந.சுப்பிரமணியன், 11.வி.செந்தில்பாலாஜி, 12.செல்லப்பாண்டியன், 13.சிவபதி, 14.முகமதுஜான், 15.அன்வர் ராசா, 16.வைகை செல்வன் ஆகியோரை  முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்