முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காத்மண்டு விமான விபத்து: பலியானவர்களுக்கு தலைவர்கள் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,செப்.- 27 - காத்மண்டு விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப் பார்க்க தனியார் விமானத்தில் சென்ற 19 பேர் விபத்தில் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பலியானவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்த கட்டுமான சங்க உறுப்பினர்கள் என்பது என் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது. தி.மு.க.வை சேர்ந்த புதுக்கோட்டை ரகுபதி, திருச்சி செல்வராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலரும் இந்த விபத்தி சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பதும் பெரிதும் வேதனை அளிக்கும் செய்தியாகும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், பருவநிலை காரணமாக நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்தால் வாடும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். காத்மண்டு விமான விபத்தில் 19 பயணிகள் பலியான சம்பவம் அறிந்து பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். இதில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்