முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வித்தியாசமோ 3 சீட்டுதான்! கருணாநிதியின் கூற்றுநம்பும்படியாக இல்லையே- பண்ருட்டி

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 7- காங்கிரசுடனான தொகுதி பேரம் நடந்ததில் வித்தியாசம் என்னவோ 3 சீட்டுதான். இதனால் கருணாநிதியின் கூற்று நம்பும்படியாகவே இல்லை. தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை மூடி மறைக்கவே கருணாநிதி சீட்டு பேரத்தை பயன்படுத்துகிறார் என்றே கருதும்படியாக உள்ளது என்று தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.  தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில தினங்களாக இழுபறி நிலையிலேயே காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தி.மு.க. உயர்நிலை குழு முடிவெடுத்தது. 

இது குறித்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து கூறுகையில், 

காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் வரை கொடுக்க முன்வந்தும் அவர்கள் 63 இடங்கள் கேட்டதாக தி.மு.க. கூறுகிறது. இதனால்தான் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது நம்பத்தகுந்ததாக இல்லை. ஏனென்றால் 60 க்கும் 63 க்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. 

உண்மையில் 2 ஜி அலைக்கற்றை ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது. அதனால் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், மகள் கனிமொழியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் இந்த வழக்கு உள்ளதால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அரசாலும் அவர்களை காப்பாற்றுவது கடினம். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகு மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கி கொண்டால் அது ஊழல் தொடர்பானது என்ற காரணத்தால் தி.மு.க.வினரே கூட கருணாநிதியின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

எனவே அதற்கு பதிலாக இப்போதே சீட்டு பேரத்தை காரணம் காட்டி மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளது தி.மு.க. மேலும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாளை கைது செய்யப்பட்டால் அது அரசியல் காரணங்களுகாக கைது செய்யப்பட்டதாக திசை திருப்ப வசதியாக இது இருக்கும். தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை மூடி மறைக்க கருணாநிதி சீட்டு பேரத்தை பயன்படுத்துகிறார் என்றேதான் எண்ணத் தோன்றுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களையும் குறிப்பாக தி.மு.க.வினரையும் ஏமாற்றும் சூழ்ச்சியை தவிர இது வேறு ஏதும் அல்ல என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்