முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் முத்துக்காளை மனுத்தாக்கல்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், செப்.- 29 - திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. கூட்டணி போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முத்துக்காளை வேட்புமனுத்தாக்கல் செய்தார். தமிழக உள்ளாட்சி தேர்தலின் ஒரு பகுதியாக திருமங்கலம் நகரசபை தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் எம்.பாரத் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதனிடையே தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என அறிவிப்பு வெளியானது. இதனால் தே.மு.தி.க. வினர் பெரிதும் சோர்வடைந்தனர்.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக முத்துக்காளை போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்தது. அதன்பேரில் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவினை தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது சிராஜிடம், வேட்பாளர் முத்துக்காளை தாக்கல் செய்தார். அப்போது தே.மு.தி.க. நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்