முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.6 லட்சம் தங்கம் திருட்டு: வாலிபருக்கு வலை

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம் அக 14 ரூ 6 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபரம் நகைகடை பஜாரில் நகை செய்யம் பட்டறை வைத்திருப்பவர் செந்தில். இவரிடம் வசந்தநகரை சேர்ந்த பாஸ்கரன் வேலைபார்த்து வந்தார். பட்டறை உரிமையாளரான செந்தில் தொழில் நிமித்தமாக மதுரை சென்றார். இரவில் அவரது கடையில் கடையில் வேலைபார்க்கும் பாஸ்கரனும் அவரது நண்பர் பெரியபட்டிணத்தை சேர்ந்த இக்பாலும் தங்கியிருந்துள்ளனர். மறுநாள் காலையில் செந்தில் மதுரையில் இருந்து ஊர் திரும்பியுள்ளார். அவரை பஸ்நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக பாஸ்கரன் சென்றபோது அங்கிருந்த இக்பால் ரூ 6 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்கத்தை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. கடைக்கு வந்து பார்த்த செந்திலும், பாஸ்கரனும் தங்கம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து பஜார் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தனர். போலீசார்வழக்குபதிவு செய்து இக்பாலை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்