எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை அக்-14 - கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரவுடிகளின் நண்பர்களாக விளங்கிய காவல்துறை தற்போது பொதுமக்களிண் நண்பணாக மாறியுள்ளது என்று நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் நெல்லை
வந்தார். நெல்லை டவுன் வாகையடி முனையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு உங்களிடம்
கேட்டுக்கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அ.தி.மு.க.வை மாபெரும் வெற்றிபெற செய்தீர்கள். இதனால் தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி மலர்ந்தது. இந்த மாபெரும்
வெற்றியின் மூலம் நான் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இதற்காக உங்களுக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஆட்சி பொறுப்பேற்றவுடனே தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.500லிருந்து 1500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் 10வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25ஆயிரம் நிதிஉதவியுடன் 4கிராம் தாலி, பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதியுதவியுடன் தாலிக்கு 4கிராம் தங்கம் வழங்கப்பட்டுவருகிறது. பெண் அரசு ஊழியர்கள் தனது பச்சிளங்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு 6மாதகாலம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கென்றே சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு மடிகணிணியும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திட ஆடு, மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டி.வி. வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சமூகநீதியை காக்க 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன். இலங்கையில்
இனப்படுகொலை நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரவுடிகளின் நண்பர்களாக விளங்கிய காவல்துறை தற்போது பொதுமக்களின் நண்பர்களாக மாறியுள்ளது. எனது ஆட்சியில் சிறந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியுள்ளது. பொதுமக்களிடம் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில்
அறிவித்திருந்தேன். அதன்படி மாநிலம் முழுவதும் நில அபகரிப்பில் ஈடுபட்டுளவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 1743 நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன, 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 28 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரை ரூ. 625 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின் தட்டுப்பாடுள்ள மாநிலமாக இருந்தது. நான் பொறுப்பேற்றுக்
கொண்டவுடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு
மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகம் சுபிட்சமான பாதையில்
செல்கிறது. குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது உள்ளாட்சி நிர்வாகம். உள்ளாட்சியில் தேர்தலில்
வெற்றிபெற்றால் நேர்மையான, திறமையான, ஒளிவுமறைவற்ற ஆட்சி உள்ளாட்சியில் இருக்கும். கடந்த ஆட்சியில் நெல்லை மாநகராட்சி தி.மு.க. வசமே இருந்தது. ஆனால் அவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கவில்லை. கவுன்சிலர்கள் என்றாலே அச்சம் ஏற்படுகிற வகையிலும், வெறுக்கத்தக்க நிலையிலும் நடந்து கொண்டார்கள். நெல்லையில் மாநகராட்சியில் வெற்றிபெற்றால் புதிய கூட்டு குடிநீர்த்திட்டம், புதிய பாதாள சாக்கடைத்திட்டம், வடிகால் வசதியுடன் கூடிய சாலை வசதி , சங்கரன்கோவில் சாலை-தெற்கு மவுண்ட்ரோடை இணைக்கும் புதிய இணைப்பு சாலை, மானூர் கூட்டு குடிநீர்த்திட்டம், மானூரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். மக்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உங்கள் நலனுக்கெதிராக நடந்த பிரதிநிதிகளை தூக்கி எரிய உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே நீங்கள் நெல்லை மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளராகிய விஜிலா
சத்யானந்த், மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்த வரலாற்று சாதனையை போன்று உள்ளாட்சி தேர்தலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துங்கள் என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.