எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.14 - தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலர்ந்து விட்டது. இப்போது நீங்களெல்லாம் அஞ்சா நெஞ்சர்களாகி விட்டீர்கள். அஞ்சா நெஞ்சர் என்று தம்பட்டம் அடித்தவர் அஞ்சி ஓடிவிட்டார் என்று மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர்கள் மற்றும் வார்டு வேட்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பக்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா நெல்லை சென்று உள்ளாட்சி மன்ற அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்தார். புதுநத்தம் ரோட்டில் உள்ள ஆயுத படை மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்து இறங்கினார். அவரை அதிமுக தலைமை கழக செயலாளரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ, புறநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மற்றும் எம்எல்ஏக்கள் மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சார வேனில் புறப்பட்டு புதுநத்தம் ரோடு, ரேஸ்கோர்ஸ் காலனி, தாமரை தொட்டி, ஐடிஐ பஸ் ஸ்டாப் வழியாக கோ.புதூரை சரியாக 4 மணி அளவில் வந்தடைந்தார். புதூர் பஸ்நிலையத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான பொதுமக்களிடையே மதுரை மேயர் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது உங்களை எல்லாம் சந்தித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டேன். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள். இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. புரட்சி தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி மலர்ந்தது. உங்களது அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்பு சகோதரியான நான் நிறைவேற்றி இருக்கிறேன். அனைவருக்கும் விலையில்லா அரிசி, முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினேன். மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவி திட்டங்களின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், பட்டம் படித்த பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் என உயர்த்தப்பட்ட உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கினோம். மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினோம். பெண் அரசு ஊழியர்கள் பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு வி
டுப்பு வழங்கினோம். இந்த திட்டங்களின் பயனை நீங்களெல்லாம் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். இது மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை என்று ஒரு தனித்துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன். இவைமட்டுமின்றி தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கல்லூரி மாணவர்களுக்கு மடி கணினி, ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் படிப்பை பாதியிலே நிறுத்துதலை குறைக்கும் பொருட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் திட்டங்களை எல்லாம் துவக்கி வைத்துள்ளேன்.
சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன். இலங்கை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை இயற்றி உள்ளோம். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமலி காடாக விளங்கிய தமிழகம் எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக நான்கே மாதங்களில் அமைதி பூங்காவாக மாறி இருக்கிறது.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் நில அபகரிப்புகள் அதிக அளவில் நடைபெற்றன. இதனை அறிந்த நான் திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களுக்கு திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தேன். இதனை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிமிருந்து புகார்கள் பெற்று வழக்கு பதிவு செய்து சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 25 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
உங்களின் முக்கிய கோரிக்கைகளான முறைப்படுத்தப்பட்ட வெளிப்படையான நிதி ஒதுக்கீடு மற்றும் செயலாக்க திட்டம் மதுரை மாநகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் தேவைக்கு கல்லாறு அணைத்திட்டம், அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்தம் அமைத்தல், மதுரை மாநகராட்சியை மாசற்ற மாநகராட்சியாக உருவாக்கும் திட்டம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், உதவி தொகைகள்வழங்க சேவை மையங்கள் அமைத்தல், வைகை ஆற்றோர பொழுது போக்கு பூங்காக்கள், நீர் வற்றாத பொற்றாமரை குளம்அமைக்கும் திட்டம், சாலை நடைபாதை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றித்தரப்படும். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் ஒரு நேர்மையான திறமையான தூய்மையான ஒளிவுமறைவற்ற மக்கள் நலனை குறிக்கோளாக கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும். எனவே உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கு இந்த தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக உங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி கொணடு மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பு சகோதரர் ராஜன்செல்லப்பாவுக்கும், மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கும் நம் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைவரையும் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்காள பெருமக்களாகிய உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் நீங்கள் நிகழ்த்தி காட்டிய வரலாற்று சாதனையை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கி காட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.