முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் நகை பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 14 - சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த பயணிகளிடமிருந்து ரூ.20.5 லட்சம் மதிப்புள்ள 813 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இவற்றை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கிய ஐந்து பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். இவர்களை சோதனை செய்ததில் இவர்களிடமிருந்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் ஒருவரிடம் தங்க நகைகளை ஒப்படைக்கும்படி சிங்கப்பூர் விமான நிலையத்தில் இவர்களிடம் அடையாளம் தெரியாத சிலர் கொடுத்ததாக தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் ஐந்துபேரும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தனர். இவர்கள் கிரீன்சேனல் வழியாக வெளியே வந்தபோது இவர்களை சந்தேகத்தின் பேரில் இடைமறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை செய்தனர். இவர்கள் வருவதற்கு முன்பாகவும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு தங்க நகைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று சென்னை விமான நிலைய சுங்க ஆணையர் சஞ்சய் குமார் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்