முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, அக் 14 - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா மற்றும் 60 மாநகராட்சி கவுன்சிலர்களை ஆதரித்து வாக்குகேட்டு பிரச்சாரம் செய்வதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் மதியம் 12.30 மணிக்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் ரோட்டில் ஜோதிநகரில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி அண்ணாநகர் 7 வது தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடைக்கு 1 மணிக்கு வருகை தந்தார். 

அவரை தமிழக அறநிலையத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், தொழிலாளர்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை, மீனவரணி ஜெனிபர் சந்திரன், தூத்துக்குடி மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா, கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஏசாதுரை, அமிர்தகணேசன், ஜோதிமணி, வக்கீல் ரவீந்திரன் உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் அங்கு மேயர் மற்றும் அதிமுக கவுன்சிலர்களை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வர் அங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்