எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர்,அக்.- 15 - 100 சதவீத வெற்றியைக் கொடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் திருப்புமுனை ஏற்படுத்தவேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். நேற்று திருப்பூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா திருப்பூர் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் விசாலாட்சிமற்றும் திருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது. அப்போது அவர் பேசியதாவது. ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது உங்களை எல்லாம் சந்தித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டேன். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள். இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. புரட்சி தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி மலர்ந்தது. உங்களது அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்பு சகோதரியான நான் நிறைவேற்றி இருக்கிறேன். அனைவருக்கும் விலையில்லா அரிசி, முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினேன். மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவி திட்டங்களின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், பட்டம் படித்த பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் என உயர்த்தப்பட்ட உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கினோம். மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினோம். பெண் அரசு ஊழியர்கள் பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு வி
டுப்பு வழங்கினோம். இந்த திட்டங்களின் பயனை நீங்களெல்லாம் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். இது மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை என்று ஒரு தனித்துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன். இவைமட்டுமின்றி தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கல்லூரி மாணவர்களுக்கு மடி கணினி, ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் படிப்பை பாதியிலே நிறுத்துதலை குறைக்கும் பொருட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் திட்டங்களை எல்லாம் துவக்கி வைத்துள்ளேன்.
சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன். இலங்கை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை இயற்றி உள்ளோம். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமலி காடாக விளங்கிய தமிழகம் எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக நான்கே மாதங்களில் அமைதி பூங்காவாக மாறி இருக்கிறது.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் நில அபகரிப்புகள் அதிக அளவில் நடைபெற்றன. இதனை அறிந்த நான் திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களுக்கு திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தேன். இதனை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிமிருந்து புகார்கள் பெற்று வழக்கு பதிவு செய்து சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 25 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
சாயப்பட்டறை பிரச்சனை காரணமாக ஜவுளித் தொழில் முடங்கிப் போயுள்ளது. பலர் வேலையிழந்துள்ளனர். ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு பிரச்சனையால் இதற்கு தீர்வு காண குழு அமைத்து பிரதிநிதிகளுடன் பேசினோம். திருப்பூர் சுத்திகரிப்பு கழிவுநீரை ஜீரோசதவீதத்திற்கு கொண்டுவர ரூ.200 கோடி தேவை என்றார்கள். அந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.200 கோடி வழங்க ஒப்புதல் அளித்தேன். திருப்பூர் மாநகராட்சி கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. எந்த அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை. தி.மு.க கவுன்சிலர்கள் என்றாலே ஒரு அச்ச உணர்வு. தி.மு.க.வினர்கள் வெறுக்கத்தக்க வகையில் நடந்து, மிரட்டி சொத்துக்களை அபகரித்துள்ளனர். நீங்கள் வளர்ச்சி அடைந்தீர்களோ இல்லையோ, தி.மு.க.வினர் வளர்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நான்காவது குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், தரமான சாலைகள், பறக்கும் மேம்பாலம், புறநகர் பகுதியில் புதிய பேருந்துநிலையம், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றித் தருவோம். அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் நேர்மையாகவும், தூய்மையான ி, திறமையான நியாயமாகவும் செயல்படுவார்கள். தி.மு.கவை கடந்த தேர்தலைப் போல் தூக்கியெறியும் நல்ல சந்தர்ப்பம். 100 சதவீத வெற்றியைக் கொடுத்த கொங்கு மண்டலம் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரக் கூட்டத்தில் சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சண்முகவேல், திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏக்கள் அவினாசி கருப்பசாமி, பரமசிவம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.