எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அக்.- 15 - மதுரை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகம் கல்வெட்டில் பெயர்களை பதிப்பதிலும், கமிஷன் வாங்குவதிலுமே கவனம் செலுத்தியது என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ். முத்துமணி குற்றம் சாட்டினார். மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 70-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் கே.சண்முகவள்ளி ஆகியோரை ஆதரித்து காமராஜபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பி.கோவிந்தசாமி(மாநில கட்டிடப் பிரிவு அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்)தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.முத்துமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது வருமாறு:- கடந்த 1977 ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற மதுரை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. அப்போது ஒரு சிறுபான்மை சமூகமான - உன்னதமான கைத்தறித் தொழில் உழைப்புக்குச் சொந்தக்காரர்களான செளராஷ்ட்டிர சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை மேயராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முனியசாமியை (அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவள்ளியின் தந்தை) துணை மேயராகவும் ஆக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. ஆரம்பகட்டத்தில் காமராஜர்புரம் பகுதி மேடும் பள்ளமுமாய் சாக்கடைத் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பிய பகுதியாக காட்சியளித்தது. இப் புறம்போக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு ஏற்படுத்தி குடியேறியதற்கும், வடக்குத் தெருவில் குப்பை மேடாகக் கிடந்த இடத்தை திருத்தி அமைத்து பள்ளிவாசல் அமைக்கப்பட்டதற்கும், ஊரணிகளை மேடாக்கி வீடுகள் அமைக்கப்பட்டதற்கும், முத்துராமலிங்கத்தேவர் தெருவில் சாக்கடைப் பகுதிகளை சீர்செய்து ரோடாக மாற்றியதற்கும் பாலரெங்காபுரத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டியைக் கட்டி அங்கிருந்து காமராஜபுரத்தின் அனைத்துப் பகுதிக்கும் குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டதற்கும் முன்னாள் துணை மேயர் முனியசாமிதான் காரணம் என்பதை இப்பகுதி மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் வழியில் நமது முதல்வரின் ஆசியோடு, இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டுமுறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்முறையும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் சண்முகவள்ளி. இவர் எடுத்த சீரிய முயற்சிகளின் காரணமாகத்தான் சிறு வியாபாரிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒரு சிறந்த மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வார்டுக்கு உட்பட்ட அனைத்து சாலைகளுமே சிமெண்ட் ரோடாக போடப்பட்டதற்கும், எல்லா பகுதிகளிலும் சோடியம் விளக்கு அமைக்கப்பட்டதற்கும், அனைத்து பகுதிகளிலும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பற்றாக்குறையின்றி குடிதண்ணீர் கிடைப்பதற்கும் தேவையான அளவிற்கு போர்வெல் அமைக்கப்பட்டதற்கும், வைத்தியநாதய்யர் தெருவில் மேல்நிலைத் தொட்டி அமைத்து அதில் இருந்து 11 குழாய்கள் மூலம் காமராஜர்புரம் முழுவதற்கும் நல்ல குடிநீர் சப்ளை செய்யப்படுவதற்கும், ராம் தியேட்டர் அருகில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டதற்கும், இப்பகுதிக்கு மண்ணெண்ணை மையம் கொண்டுவந்ததற்கும் நமது அ.தி.மு.க வேட்பாளர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே காரணம். தற்போது மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்துள்ளது. அம்மாவின் தலைமையில் சீரிய ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால், அம்மாவிடம் இருந்து அதிக நிதியை பெற்று அடிப்படை வசதிகளை இந்தப் பகுதி மக்கள் பெற்றிடவும், நீண்டகாலமாக குடியிருந்து வருவோர் அனைவருக்கும் உரிய முயற்சி எடுத்து வீட்டு மனைப்பட்டாக்களை பெற்றுக் கொடுத்திடவும் எளிதாக இருக்கும். எனவே மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கும், 70 வது வார்டு வேட்பாளர் சண்முகவள்ளிக்கும் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள். இன்றைய மதுரை மாநகரம் தி.மு.க. ரவுடிகளின் அட்டகாசப் பிடியில் இருந்து விடுபட்டு அமைதியாக விளங்குகிறது. மதுரை அமைதிப் பூங்காவாக நீடித்து, மக்களின் மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க அனைவரும் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
`க' கட்சி மதுரை மாநகராட்சியில் பொறுப்பில் இருந்தபோது மதுரை மாநகரில் வளர்ச்சிப் பணிகளில் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கவனம் துளியும் செலுத்தவில்லை. மாறாக ஆடம்பர விழாக்களை நடத்தி கல்வெட்டு பதிப்பதிலும், கமிஷன் பார்ப்பதிலுமே ஆர்வம் காட்டினார்கள். எனவே சட்டமன்ற தேர்தலில் ஒரு மவுனப் புரட்சி மூலம் புதிய வரலாறு படைத்ததுபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை அமோகமாக வெற்றிபெறச் செய்யுங்கள். இந்த வெற்றி மக்களின் வெற்றியாக அமையும்.
இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.