எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, அக்.- 15 - தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ்பாரிக்கு கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் கைப்பாவையாக செயல்பட்டார் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோவையில் நடந்த அ.தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் தூத்துகுடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை துவக்கினார். நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஈரோட்டில் இருந்து பிரச்சாரத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தார். அங்கு இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் நேற்று மதியம் வந்து இறங்கினார். பின்பு, கார் மூலம் நஞ்சப்பாரோடு 100 அடி ரோடு வழியாக பொது கூட்டம் நடக்கும் சிவானந்த காலனிக்கு சென்றார். அங்கு வேனில் இருந்தபடி, கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி மற்றும் 100 வார்டுகளில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிதாவது:- கடந்த ஐந்து ஆண்டு காலத்தல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க-வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள், உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக தங்களை முன்னேற்றிக் கொண்டனர். கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் தான் இருந்து வந்தது. இருப்பினும், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகனுடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இவர் வைத்தது தான் சட்டம். இவருடைய கைப்பாவையாகத் தான் மேயர் செயல்பட்டார். தங்களுடைய தேவைகளை கவுன்சிலர்கள் நிறைவேற்றிக் கொண்டார்களே தவிர உங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும், செய்து தரவில்லை. கவுன்சிலர்கள் என்றாலே, உங்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தான் இருந்தது. அந்த அளவிற்கு திமுக-வினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். உங்களை மொத்தத்தில். நீங்களும் வளர்ச்சி அடையவில்லை, இந்த கோயம்புத்தூர் மாநகராட்சியும் வளர்ச்சி அடையவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுடனேயே இருந்து உங்களின் குறைகளை தீர்ப்பவர்களாக, உங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக விளங்குவார்கள், உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
உங்களின் முக்கிய கோரிக்கைகளான,
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
பாதாள சாக்கடைத் திட்டத்தினால் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல்.
குப்பை கூளங்களை அகற்றி சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல்.
போக்குவரத்து நெரிசாலை சீர்செய்யும் வகையில், பாலங்கள் சுரங்கப் பாதைகள் அமைத்தல்.
கோவை மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கும் திட்டம்.
உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம்.
வன விலங்குகள் பூங்காவினை விரிவுபடுத்தும் திட்டம் ஆகியவை நிறைவேற்றித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து ஆராய்த்து அவற்றை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில், ஒரு நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவு மறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்தப் பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்புச் சகோதரர் செ.ம.வேலுசாமி அவர்களுக்கும், மாநகராட்சி மாமன்ற உறுப்பனர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டல மக்களாகிய நீங்கள் கழகத்திற்கு 100 சதவீத வெற்றியை அளித்து வரலாற்றுச் சாதனையை படைத்தீர்கள்.
அதே போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எரிவதற்கான நல்ல சந்தர்ப்பம் இப்பொழுது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி கொண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் செ.ம.வேலுசாமி அவர்களுக்கும், கழக மாமன்ற வேட்பாளர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்
இவ்வாறு பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாத்தின் போது தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மலரவன், சின்னச்சாமி, ஓ.கே.சின்னராஜ், செ.தாமோதிரன், முத்துகருப்பண்ணசாமி முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதிரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.