முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னையில் இன்று ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். - 17  - அ.தி.மு.க. 40 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். இந்த விழா தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கொண்டாட ப்படுகிறது. இது பற்றிய விபரம் வருமாறு -  அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதன் 40 -வது ஆண்டு தொடக்க விழா இன்று நடக்கிறது. இதையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தி ல் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.  இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறி க்கை வருமாறு - அ.தி.மு.க.வின் 40 -வது ஆண்டு தொடக்க விழா இன்று (17) கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மா லை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். தொண்டர்களுக்கு இனி ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இவ்வாறு அந்த அறி க்கையில் கூறப்பட்டு உள்ளது.  அ.தி.மு. க 40 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3 - தேதி வரை பொதுக்கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள் தமிழ்நாடு, அந்த மான், உட்பட தென் மாநிலங்களில் நடக்கிறது. இதில் முக்கிய தலை வர்கள் பங்கேற்கிறார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்