முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

ஜகார்த்தா,அக்.18 - இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. கடந்த சில வருடங்களாக இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுகிறது. நேற்றுமுன்தினம் சிமேலு தீவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டும், கட்டிடங்களை விட்டும் வெளியேறினார்கள். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். பீதி அடங்கியதும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையே 5.4. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. பூமிக்கு அடியில் 45.80 கி.மீட்டர் ஆழத்தில் இது நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வழக்கத்தை விட உயரமான அலைகள் எழுந்ததால் சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்