எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.21 - நடந்து முடிந்த திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் nullங்கள் அளித்த தீர்ப்புகளுக்கு முதலில் என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியைப் பற்றி nullநீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்தத் தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான் உறுதிபட நம்பினேன். என்னுடைய நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது. உங்களுடைய மகத்தான தீர்ப்பு நான் எதிர்பார்த்ததைப் போலவே அமைந்திருக்கிறது. எனவே, உங்கள் அனைவருக்கும் மிகுந்த மன நெகிழ்ச்சியோடு, அன்புப் பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன். எண்ணற்ற இடர்ப்பாடுகள், பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள், கடன் சுமைகள் என்று அனைத்து முனைகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக ஆட்சிப் பொறுப்பைத் தான் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னிடம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் அளித்தீர்கள். இந்தக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி உங்கள் அன்பை இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே சாட்சி. என்னுடைய பணிகளுக்கெல்லாம் பாராட்டு கூறும் வகையிலும், பக்கபலமாக இருக்கும் முறையிலும், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்காளப் பெருமக்களாகிய nullங்கள் மகத்தான வெற்றியை அளித்திருக்கிறீர்கள். 2011, ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் மொத்தம் 1,54,322 வாக்குகள் பதிவாகின. அதாவது, 74.93 சதவீத வாக்குகள். இதில், அஇஅதிமுக 77,492 வாக்குகள் பெற்று, 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில், 1,27,433 வாக்குகள் பதிவாகின. அதாவது, 61.15 சதவீத வாக்குகள். இதில், அஇஅதிமுக 69,029 வாக்குகள் பெற்று, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை நம்மோடு கூட்டணிக் கட்சிகள் இல்லை. இருந்தும் கூட, முன்னரைக் காட்டிலும் இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுவே, எனது ஆட்சிக்கு நீnullங்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழ் என்று நான் கருதுகிறேன். மக்கள் நலப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி, துடிப்போடு நடைமுறைப்படுத்துவதில் என்னுடைய உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற வாக்குறுதியையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன். இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்களுக்கும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்று, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் கழக வேட்பாளர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். நகர மன்றத் தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் 88 இடங்களில் வென்றிருக்கிறார்கள். பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் 284 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற மேலும் பல இடங்களில் கழக வேட்பாளர்களே வெற்றி வாய்ப்போடு முன்னணியில் இருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளது. இவை மட்டும் அல்லாமல், கட்சி சின்னங்கள் இன்றி நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்ட கழக உடன்பிறப்புகளும் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற இனிய செய்தியும் வந்து கொண்டே இருக்கின்றன. உள்ளாட்சி மன்றங்கள் என்பவை ஜனநாயகத்தின் தொடக்கப் பள்ளி. நாற்றங்கால். வலுவான உள்ளாட்சி அமைப்புகள், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் திட்டங்களை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியம் என்று நான் பலமுறை உங்களுக்கு நினைவூட்டி இருக்கிறேன். என்னுடைய கருத்தை ஏற்று, மாநில அரசின் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி உரித்தாகுக.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், கழகத்தின்பால் அன்பு கொண்ட தோழமைக் கட்சியினருக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அனைவரும் ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகளுடன் சேர்ந்து வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான தமிழகம் காண்போம்! மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்! இதுவே இந்தத் தருணத்தில் நான் உங்களுக்கு உறுதி கூறுகின்ற நல்ல செய்தியாகும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.