எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.22 - தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளையுமே அ.தி.மு.க. கைப்பற்றி இமாலய சாதனை படைத்துவிட்டது. தனித்து போட்டியிட்ட நிலையிலும் இந்த வெற்றி கட்சிக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்துவிட்டன. ஆனால் அ.தி.மு.க. மாநகராட்சகளில் வெற்றிபெற்றதோடு 90-க்கும் மேற்பட்ட நகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது. தி.மு.க.வுக்கு 23 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். அ.தி.மு.க. மட்டுமே கிட்டத்தட்ட 148 தொகுதிகளை வென்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமையவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. இதுவரை கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்ததில்லை. தற்போது முதல் முறையாக அ.தி.மு.க. உள்பட எல்லா கட்சிகளும் தனித்து களம் இறங்கின. இதனால் இந்த கட்சிகளின் பலத்தை அறிய மக்களே ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். தேர்தலும் வந்தது. கடந்த 17,19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் வெற்றியை தாருங்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டபடி தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை கொடுத்துவிட்டார்கள். தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., சென்னை, மதுரை,உள்ளிட்ட 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது. மேலும் 90 நகராட்சிகளையும் அ.தி.மு.க.கைப்பற்றி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. ஆனால் தி.மு.க. வுக்கு 23 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. தே.மு.தி..க.2 நகராட்சிகளையும் இ.கம்யூனிஸ்ட் 2 நகராட்சிகளையும் ம.தி.மு.க. குளித்தலை நகராட்சியையும் பா.ஜ.க. 2 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளன. காங்கிரஸ், பா.ம.க.போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்து உள்ளன.
சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியத்தை விட சுமார் 2 லட்சத்து 68 ஆயிரத்து 6 வாக்குகள் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பெற்றிருந்தார். சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 175 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றிவிட்டது. காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. திருச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் விஜயாவைவிட 52 ஆயிரத்து 415 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். மதுரையில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 119 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். கோவை அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுசாமி நேற்று இரவு 8 மணி இரவு நிலவரப்படி 2 லட்சத்து 66 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 404 வாக்குகள் பெற்று பின்னணியில் இருந்தார். திருப்பூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட விசாலாட்சி ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 949 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் 59 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஈரோடு மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்லப்பொன்னியை விட 46 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகாயினி சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சவுண்டப்பன், தூத்துக்குடியில் அ.தி.மு.க.வேட்பாளர் சசிகலாபுஷ்பா ஆகியோரும் அமோக வெற்றிபெற்றுள்ளனர். ஆகமொத்தம் 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துவிட்டது. தி.மு.க. ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்றவில்லை. 90 நகராட்சிகளிலும் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், காரைக்குடி, தேவகோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், கம்பம், கொடைக்கானல், கரூர், ஊட்டி, குன்னூர், கூடலூர், பண்ருட்டி,ராசிபுரம், கோவில்பட்டி, நாகை, மன்னார்குடி, கும்பகோணம், மேட்டூர், செங்கோட்டை, திருவள்ளூர், திருவேற்காடு, தாம்பரம், வேதாரண்யம், மறைமலைநகர், பொள்ளாச்சி, தர்மபுரி, பட்டுக்கோட்டை வாலாஜாபாத் போன்ற நகராட்சிகள் உள்பட 90-க்கும் மேலான நகராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 23 நகராட்சிகளையும் தே.மு.தி.க. 2 நகராட்சிகளையும் இடது கம்யூனிஸ்ட் 2 நகராட்சிகளையும் குளித்தலை நகராட்சியை ம.தி.மு.க. வும் பா.ஜ. க. 2 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளன. ஆனால் இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தனித்து போட்டியிட்டு சாதனை படைப்போம் என்று கூறிய விஜயகாந்த் கட்சி மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.