முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ்ரதா நகரில் இறைச்சி கடையில் கடாபி உடல்

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,அக்.23 - லிபியா அதிபர் கடாபி கடந்த 20 -ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் மிஸ்ரதா நகரில் உள்ள பழைய இறைச்சி கடையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை எங்கு எப்போது அடக்கம் செய்து என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். லிபியா அதிபர் கடாபி கடந்த 20 -ம் தேதி சிரித் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னதாக குண்டு காயத்துடன் சாக்கடை குழாயில் பதுங்கி இருந்த அவரை ஒரு காரில் ஏற்றி அழைத்து வந்தனர். நகரின் முக்கிய பகுதிக்கு வந்த போது அங்கு வந்த புரட்சிப்படை வீரர்கள் அவரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர்.

அவ்வாறு அடித்து உதைத்ததில் அவர் இறந்து விட்டார். அதன் பிறகு அவரது உடலை புரட்சி படைவீரர்கள் தெருவில் இழுத்து சென்றனர். என்ற தகவல் தற்போது வெளியாகிஉள்ளது. ஆனால் அந்த சர்ச்சையை பிரதமர் மக்மூத் ஷிப்ரிசஸ் மறுத்துள்ளார். 

கடாபியை காரில் அழைத்து சென்ற போது புரட்சி படைக்கும் கடாபி ஆதரவு படைக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது எங்கேயோ இருந்து பாய்ந்து வந்த குண்டு அவரது தலைஇல் பாய்ந்ததால் அவர் உயிரிழந்தார்.

இந்த குண்டு புரட்சிப்படை சுட்டதா? அல்லது கடாபி ஆதரவு ராணுவம் சுட்டதா? என தெரியவில்லை. அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வரை அவர் உயிருடன் தான் இருந்தார் என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே கொல்லப்பட்ட கடாபியின் உடலை எங்கே அடக்கம் செய்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தற்போது அவரது உடல் மிஸ்ரதா நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் அதற்கு அந்த நகர மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனவே, அவரது உடல் மிஸ்ரதா நகரில் உள்ள பழைய இறைச்சி கடையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. உடல் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அது ஒரு குளிர்சாதனை பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது உடலை எங்கு எப்போது அடக்கம் செய்வது என்பது குறித்து இடைக்கால அரசின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இறுதியில், அவரது உடலை ரகசிய இடத்தில் அடக்கம் செய்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அது எப்போது நடைபெறும் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. 

தற்போது கடாபியின் மனைவி மற்றும் மகன் ஆயிஷா,  2மகன்கள் பக்கத்து நாடான அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடாபி அவரது மகன் முட்டாசிம் ஆகியோரின் உடல்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago