முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: பிரணாப் பதில்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, அக். - 24 - மாநிலங்களுக்கு குறிப்பாக காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். போதிய நிதி வழங்கப்படவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் ஆளாத மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தண்டிப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். அலைக்கற்றை ஊழல் தொடர்பாக வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என தி.மு.க. கூறியுள்ளது குறித்து பிரணாப்பிடம் கேட்ட போது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாகத்தான் சந்திக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்