முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பிரச்சினை விரைவில் தீர்வு காணப்படும்-குலாம்நபி

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 25 - தெலுங்கானா கோரிக்கை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். மேலும் மக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு தெலுங்கானா போராட்டத்தை கைவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், தெலுங்கானா பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வு காணப்படும். தேசிய நலனையும், தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும். தெலுங்கானா பகுதி ஆந்திர அரசு ஊழியர்கள் தெலுங்கானா கோரி நீண்ட கால போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 5 வார காலமாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். தெலுங்கானா பகுதி அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பண்டிகை காலத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசுக்கு உதவுமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்