முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வைக்கப்பட்ட வழக்கில் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

திருமங்கலம், நவ.1 - திருமங்கலம் அருகே பாலத்திற்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில குற்றப் புலனாய்வு பிரிவு ஏ.டி.ஜி.பி. சேகர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஆலம்பட்டி ஓடுபாலத்திற்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. ரத யாத்திரை மேற்கொண்டிருந்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி செல்லும் வழியில் வைக்கப்பட்ட வெடிகுண்டை போலீசார் உரிய நேரத்தில் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர். இதனால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. 

இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. பிரிவு ஏ.டி.ஜி.பி. சேகர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து ஆலம்பட்டி ஓடுபாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு நடத்தினார். பின்னர் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் ஏராளமான தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்