எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 4 - அத்வானியை கொல்ல வெடிகுண்டு வைத்ததற்கு மூளையாக செயல்பட்ட பக்ரூதீனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் செல்போன் சிம்கார்டு வாங்கி கொடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 27-ந்தேதி 2-ம் கட்ட யாத்திரையை மதுரையில் இருந்து அத்வானி தொடங்கினார். அவர் யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக செயலிழக்க செய்யப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வெடிகுண்டு சம்பவம் எல்.கே.அத்வானியை குறி வைத்து நடத்தப்பட்டது என்று தெரியவந்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு போலீசார் சதிகாரர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், சிறப்பு புலனாய்வு டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சதிகாரர்கள் தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி இமாம்அலியின் கூட்டாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலக்கப்பட்டு மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்துல்லா (26), சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் திருமங்கலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீnullதிபதி அனுமதித்ததையடுத்து அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல்வேறு தகவல்களை 2 பேரும் தெரிவித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் இமாம்அலியின் நெருங்கிய கூட்டாளியான மதுரை நெல்பேட்டையை சேர்ந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் உள்ளிட்ட 3 பேர் வெளிமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்து சென்றுள்ளனர். தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கடந்த 2002-ல் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் அல்உம்மா தீவிரவாதிகள் இமாம்அலி, ஹைதர்அலி ஆகியோரை போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி மீட்டு சென்ற சம்பவத்தில் ஈடுபட்டவர். இவரது தந்தை சிக்கந்தர். போலீஸ் எஸ்.ஐ.யாக இருந்தவர். இதனால் பக்ருதீன் பெயரிலும் போலீஸ் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். பெங்களூரில் இமாம்அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இப்ராகிம் என்பவரது மைத்துனர்தான் போலீஸ் பக்ருதீன். இவர் மீது மதுரை, வேலூர் ஆகிய பகுதிகளில் 22 வழக்குகள் உள்ளன. இமாம்அலியை மீட்டு சென்ற வழக்கில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானார். மதுரை மாட்டுத்தாவணியில் டாஸ்மாக் மதுக்கடையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் 2 அடிதடி வழக்குகளிலும் போலீஸ் பக்ருதீன் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ் பக்ருதீன், எல்.கே.அத்வானியை கொல்ல சதி திட்டம் தீட்டி செயல்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
போலீஸ் பக்ருதீனை பிடித்தால்தான் பைப் வெடிகுண்டு தொடர்பாக முழு தகவல்களையும் பெறமுடியும் என்பதால் தனிப்படையினர் போலீஸ் பக்ருதீனை குறிவைத்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் மற்றொரு நபரான மாலிக் மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டவர். அப்போது 17 வயதான மாலிக் மைனர் என்பதால் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் nullசாரி கங்காதரன் கொலை வழக்கிலும் இவர் தேடப்பட்டு வருகிறார். போலீஸ் பக்ருதீன், மாலிக் ஆகியோர் இந்து முன்னணி பிரமுகர் ராஜகோபாலன் கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களது குற்றப்பின்னணி குறித்து மேலும் விரிவாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களது வழக்குகளை விசாரித்த தற்போது வெளியூர்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
மேலும் வெடிகுண்டு வைத்தவர்களுக்கு உதவிய மற்றொரு நபரையும் போலீசார் மாமல்லபுரத்தில் உள்ள லாட்ஜில் வைத்து கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் பிரியாணி கடை நடத்தி வரும் அல்தாப் என்பவர் ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும், மேலும் ஒரு வழக்கிலும் கைதானவர், பின்பு திருந்தி பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு வைத்து கைதான அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்மத் ஆகியோரின் செல்போன் சிம்கார்டுகளை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் அந்த செல்போனும், சிம்கார்டும் திருவல்லிக்கேணியில் உள்ள அல்தாப் பெயரில் வாங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உத்தரவின் பேரில் அல்தாப்பை பிடிக்க சிறப்பு புலனாய்வு படை முடுக்கி விடப்பட்டது. விசாரணையில் அல்தாப் குண்டு பிடிபட்டதிலிருந்து வீட்டிற்கே வருவதில்லை என தெரிய வந்துள்ளது. விசாரணையில் அல்தாப் மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அல்தாப்பை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அல்தாப் விசாரணைக்கு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.