முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - பாகிஸ்தான் பிரதமர்கள் மாலத்தீவில் இன்று சந்தித்து பேச்சு

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மாலே, நவ.- 10 - இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானியும் இன்று  மாலத்தீவில் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாடு மாலத்தீவில் இன்று துவங்க உள்ளது.  இதற்காக இந்த 8 நாடுகளின் தலைவர்களும்  மாலத்தீவு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த மாநாடு துவங்குவதற்கு முன்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானியும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்த உள்ளனர். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தான் பிரதமருடன் இந்திய பிரதமர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப நாட்களில் இரு நாடுகளுக்கு இடையே  நல்லெண்ண அம்சங்கள் தோன்றியிருப்பதை அடுத்து  இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது  தொடர்பாக இந்த பேச்சுவாத்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மாலத்தீவில்  உள்ள அட்டூ தீவில் இன்று காலை நடக்கிறது.

கடந்த 18 மாதங்களில் இரு பிரதமர்களும் சந்தித்து பேசுவது இது 3-வது முறையாகும். இந்தியா தங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு என்று பாகிஸ்தான் சமீபத்தில் அறிவித்துள்ளதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்