முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருநானக் ஜெயந்தி விழா: கோலாகல கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சண்டிகார், நவ.11- குருநானக் ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் , அரியானா மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சீக்கிய மத குரு குருநானக் பாகிஸ்தானில் உள்ள  லாகூர் மாகாணத்தில் நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 1469 ம் ஆண்டு பிறந்தார். 

இவர் பிறந்த தினம்தான் குரு நானக் ஜெயந்தியாக சீக்கிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் பலரும் நேற்று நான்கானா சாஹிப்பில் உள்ள குருநானக் பிறந்த நினைவிடத்தில் கூடி பிரார்த்தனை செய்தனர்.

பஞ்சாப் மற்றும் அரியானாவில் இந்த ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல்,  முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அரியானா கவர்னர் ஜெகனாத் பகாடியா, முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து செய்திகளை வழங்கியுள்ளனர்.

சீக்கியர்களின் புனித தலங்களில் உள்ள குளங்களில் சீக்கியர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.

அலங்காரம் செய்யப்பட்டிருந்த சீக்கியர்களின் பொற்கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனைகளை செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள குருத்துவாராக்களில் குரு நானக் ஜெயந்தி சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்