முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர் பிரச்சனை குறித்து ராஜபக்சேவிடம் பிரதமர் கவலை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

அட்டூ, நவ.- 12 - தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்களை எழுதி, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில்  தெற்காசிய நாடுகளின் 17 வது சார்க் உச்சிமாநாடு மாலத்தீவின் அட்டூ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானியை சந்தித்து பேசினார். மேலும் அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து  தாக்குதல் நடத்துவது குறித்தும் ராஜபக்சேவிடம் பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழர்களின் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறும் தமிழ் மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுமாறும் ராஜபக்சேவை பிரதமர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சந்தித்து பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்