எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீவில்லி, நவ. - 12 - ரயில் பயண சேவை என்பது சமுதாய ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகும். ஜாதி, மதம், இனம், மொழி மறந்து மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், தங்களுக்குள் வேற்றுமைகளை மறந்து பயணம் செய்ய இந்த ரயில் பயணம் பெரிதும் உதவுகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டானியாவும், தேசப் பிதா மகாத்மா காந்தியும் ரயிலில் செல்லும் போது வெள்ளையர்கள் அவரை ரயிலில் பயணம் செய்யக் கூடாது எனக் கூறி அடித்து துரத்தும் சம்பவமும், மணியாச்சியில் தியாகி வாஞ்சிநாதன், தூத்துக்குடி கலெக்டர் ஆஷ்துரையை அவரது மனைவியர் கண் எதிரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்ட சம்பவமும் நமது நினைவை விட்டு அகலுவது இல்லை. அந்தளவுக்கு வெள்ளையர் அமைத்த ரயில் நமது வாழ்க்கையில் ஒன்றி இருந்து வருகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் ரயில் சேவை என்பது வட மாநிலங்களை காட்டிலும், தென்னிந்தியாவில் சவலைப்பிள்ளையாக இருப்பது தெள்ளத் தெளிவாகும். தமிழகத்தில் மத்திய ரயில்வே துறையின் பங்கு மாற்றான்தாய் மனப்பான்மையாக இருப்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியாகும். உலக நாடுகள் ஒலியின் வேகத்தை ஒப்பிட்டு புல்லட் ரயில், சுரங்க ரயில் என அதிவேக ரயிலை செலுத்தி முன்னேறி வரும் வேளையில்தான் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரம் பெற்று 50 வருடங்களுக்கு பின்னால் அகல ரயில் பாதையை பார்த்தது. அதுவும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆமை வேகத்தில் அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. ஆனால் அதன் பிறகும் கடந்த 25 வருடமாக சென்ற ரயில்கள்தான் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை போன்ற தமிழக கடைக்கோடி நகரங்களில் இருந்தும் செல்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க. மத்திய அரசு கூட்டணியில் இருந்தும் கடந்த காலத்தில் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே போல் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செங்கோட்டை - கோவை ரயில் சேவை ஆகும். விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டு ரயில் விடப்பட்டது. அதிலும் குறிப்பாக, வைகோ சிவகாசி எம்.பியாக இருந்த சமயம்தான் விருதுநகர் தென்காசி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பின்னர் அது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை தமிழகத்தின் எல்லையாகும். இந்த 2 பெரிய ஊர்களை இணைக்கும் ரயிலை இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்பதுதான். இந்த செங்கோட்டை - கோவை ரயில் வேண்டி பொதுமக்கள் பலர் பலமுறை நீண்ட வருடமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. செங்கோட்டை - கோவை ரயிலை இயக்கினால் பொதுமக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் என்ன நன்மை என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். செங்கோட்டை தமிழக எல்லை நகரம். இங்கிருந்துதான் கேரளா செல்ல முடியும். சபரிமலை செல்வதற்கு நுழைவாயில் இதுதான். தொடர்ந்து தென்காசி. இங்கிருந்துதான் குற்றாலம் செல்ல முடியும். மேலும் ராஜபாளையம் ஒரு வர்த்தக நகரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக நகரம், சிவகாசி, விருதுநகர் தொழில் நகரங்கள். அதைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவை முறையே தொழில் நகரங்களாகும். மேற்குறிப்பிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் ரயிலை இயக்கினால் குறிப்பாக, தொழில் வளம், சுற்றுலா பெருகும். மேலும் குறிப்பாக, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவை, திருப்பூருக்கு செல்லும் போது பஸ்சை எதிர்பார்க்காமல் ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சொகுசாக பயணம் செய்ய முடியும். அதே போல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய பெரிய நகரை சேர்ந்த மக்கள் சுற்றுலா செல்ல இந்த ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்த முடியும். தற்போது மேற்குறிப்பிட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி அவதியுடன் பயணம் செய்கின்றனர். பயண நேரமும் அதிகமாகிறது. எனவே பொதுமக்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள், சபரிமலை பக்தர்கள் நலன் கருதி செங்கோட்டை - கோவை புதிய ரயிலை மத்திய அரசு உடனடியாக இயக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்களா? இந்த ரயில் திட்டம் அமலுக்கு வருமா? இந்த செங்கோட்டை - கோவை ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.