தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீவில்லி, நவ. - 12 - ரயில் பயண சேவை என்பது சமுதாய ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகும். ஜாதி, மதம், இனம், மொழி மறந்து மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், தங்களுக்குள் வேற்றுமைகளை மறந்து பயணம் செய்ய இந்த ரயில் பயணம் பெரிதும் உதவுகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டானியாவும், தேசப் பிதா மகாத்மா காந்தியும் ரயிலில் செல்லும் போது வெள்ளையர்கள் அவரை ரயிலில் பயணம் செய்யக் கூடாது எனக் கூறி அடித்து துரத்தும் சம்பவமும், மணியாச்சியில் தியாகி வாஞ்சிநாதன், தூத்துக்குடி கலெக்டர் ஆஷ்துரையை அவரது மனைவியர் கண் எதிரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்ட சம்பவமும் நமது நினைவை விட்டு அகலுவது இல்லை. அந்தளவுக்கு வெள்ளையர் அமைத்த ரயில் நமது வாழ்க்கையில் ஒன்றி இருந்து வருகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் ரயில் சேவை என்பது வட மாநிலங்களை காட்டிலும், தென்னிந்தியாவில் சவலைப்பிள்ளையாக இருப்பது தெள்ளத் தெளிவாகும். தமிழகத்தில் மத்திய ரயில்வே துறையின் பங்கு மாற்றான்தாய் மனப்பான்மையாக இருப்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியாகும். உலக நாடுகள் ஒலியின் வேகத்தை ஒப்பிட்டு புல்லட் ரயில், சுரங்க ரயில் என அதிவேக ரயிலை செலுத்தி முன்னேறி வரும் வேளையில்தான் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரம் பெற்று 50 வருடங்களுக்கு பின்னால் அகல ரயில் பாதையை பார்த்தது. அதுவும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆமை வேகத்தில் அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. ஆனால் அதன் பிறகும் கடந்த 25 வருடமாக சென்ற ரயில்கள்தான் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை போன்ற தமிழக கடைக்கோடி நகரங்களில் இருந்தும் செல்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க. மத்திய அரசு கூட்டணியில் இருந்தும் கடந்த காலத்தில் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே போல் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செங்கோட்டை - கோவை ரயில் சேவை ஆகும். விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டு ரயில் விடப்பட்டது. அதிலும் குறிப்பாக, வைகோ சிவகாசி எம்.பியாக இருந்த சமயம்தான் விருதுநகர் தென்காசி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பின்னர் அது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை தமிழகத்தின் எல்லையாகும். இந்த 2 பெரிய ஊர்களை இணைக்கும் ரயிலை இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்பதுதான். இந்த செங்கோட்டை - கோவை ரயில் வேண்டி பொதுமக்கள் பலர் பலமுறை நீண்ட வருடமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. செங்கோட்டை - கோவை ரயிலை இயக்கினால் பொதுமக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் என்ன நன்மை என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். செங்கோட்டை தமிழக எல்லை நகரம். இங்கிருந்துதான் கேரளா செல்ல முடியும். சபரிமலை செல்வதற்கு நுழைவாயில் இதுதான். தொடர்ந்து தென்காசி. இங்கிருந்துதான் குற்றாலம் செல்ல முடியும். மேலும் ராஜபாளையம் ஒரு வர்த்தக நகரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக நகரம், சிவகாசி, விருதுநகர் தொழில் நகரங்கள். அதைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவை முறையே தொழில் நகரங்களாகும். மேற்குறிப்பிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் ரயிலை இயக்கினால் குறிப்பாக, தொழில் வளம், சுற்றுலா பெருகும். மேலும் குறிப்பாக, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவை, திருப்பூருக்கு செல்லும் போது பஸ்சை எதிர்பார்க்காமல் ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சொகுசாக பயணம் செய்ய முடியும். அதே போல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய பெரிய நகரை சேர்ந்த மக்கள் சுற்றுலா செல்ல இந்த ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்த முடியும். தற்போது மேற்குறிப்பிட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி அவதியுடன் பயணம் செய்கின்றனர். பயண நேரமும் அதிகமாகிறது. எனவே பொதுமக்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள், சபரிமலை பக்தர்கள் நலன் கருதி செங்கோட்டை - கோவை புதிய ரயிலை மத்திய அரசு உடனடியாக இயக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்களா? இந்த ரயில் திட்டம் அமலுக்கு வருமா? இந்த செங்கோட்டை - கோவை ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு