முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆற்றில் படகு கவிழ்ந்து 13 பேர் பரிதாப சாவு

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மந்த்சவூர், நவ.14- மத்திய பிரதேச மாநிலத்தில் சம்பல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவூர் அருகே சம்பல் நதியில் 18 பேருடன் ஒரு படகு சென்றுகொண்டிருந்தது. அந்தப் படகு ஆற்றங்கரை ஓரமாக சென்றுகொண்டு இருந்தபோது திடீரென கவிழ்ந்து மூழ்கியது. இதில் 13 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். 1 சிறுவன் மற்றும் 3 பெண்களும் இந்த விபத்தில் பலியாயினர். இந்த படகை ஓட்டிச் சென்றவர் உட்பட 6 பேர் நீந்தி கரைசேர்ந்தனர். ஒரு கிராமத்தைச் சேரந்த இவர்கள் ஒரு கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தபோதுதான் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது. சம்பவ இடத்திலிருந்து பலியான 13 பேரின் சடலங்களும் உடனடியாக மீட்கப்பட்டன. பலியான இவர்கள் 13 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த படகில் 6 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக 18 பேரை ஏற்றிக்கொண்டு சென்றதால்தான் இந்த படகு விபத்துக்குள்ளானது என்று போலீசார் தெரிவித்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்