எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.14- தமிழக மக்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகியவற்றில் கலெக்டர்களும், போலீசாரும் முக்கிய பங்குவகிக்கிறார்கள். இவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்காக கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் தடவையாக கலெக்டர்கள் மாநாடு சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 2 நாள் நடக்கிறது. முதல் நாள் மாநாடு நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள், சிறப்புத்திட்டங்கள் ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா? சட்டம்- ஒழுங்கை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநிலத்தில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய நமது கடமை, பணிகள் குறித்து ஆலோசிக்க இது போன்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் எடுக்கப்படும் முடிவுகள், செயல்படுத்தும் திட்டங்கள் மக்களின் எதிர்கால தேவையை nullர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
நான் முதல்வராக பொறுப்பேற்கும் போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். சமூக, பொருளாதார நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வருவாயை மேம்படுத்தவும், நிர்வாகத்தை சிறப்பாக, திறமையாக நடத்துவதற்கும் எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நேர்மையான, திறமையான, பொறுப்பான, நிர்வாகத்தில் உறுதிnullண்டு அதை செயல்படுத்தி வருகிறோம். தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக முழுமையான ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறேன். அவற்றை படிப்படியாக நிறைவேற்றியும் வருகிறேன்.
தமிழக மக்கள் எல்லோரும், எல்லாம் பெற வேண்டும் என்பது எனது ஆசை. அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். சட்டம்ஒழுங்கை நிலை நாட்டுவது, நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பது, வேகமான பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது ஆகியவை இந்த மாநாட்டின் நோக்கமாகும். சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் கட்டுப்படுத்த இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிலங்களை அபகரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நடவடிக்கை தொடரும். மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்கு முன்பும் எனது ஆட்சி காலங்களில் தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளனர். நான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் போலீசார் அச்சமின்றி சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அனைத்து பிரச்சினைகளிலும் பயமின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நமது நோக்கம் நிறைவேற ஊழல் பிரச்சினை பெரும் தடையாக உள்ளது. எனவே ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அவசியம். ஆட்சி தலைவர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மக்கள் நேர்மையான பணியை எதிர்பார்க்கிறார்கள். அதை கண்காணிக்கும் கடமை மாவட்ட கலெக்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உண்டு. அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதும், அவர்கள் கையில்தான் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர்களும், அரசு அதிகாரிகளும் மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் பணி புரிவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நாம் ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி, சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த அரசு வறுமை ஒழிப்பு, கட்டமைப்பு, வருமானம், வேலை வாய்ப்பு, திறமை போன்றவற்றில் நகர்புற, கிராமப்புற வேறுபாடுகளை களைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படவில்லை. வளர்ச்சி திறன் அதிகரிக்கப்படவில்லை. எனவே எனது அரசு வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
இந்த துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும். 2வது பசுமை புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன். இதில் மாவட்ட கலெக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். தமிழக அரசு புதிதாக செயல்படுத்த உள்ள திட்டத்தின் மூலம் நமது விவசாயியின் வருமானம் 3 மடங்காக உயரும் என்று நம்புகிறேன். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் விவசாயிகள் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும். கடலோர மாவட்ட கலெக்டர்கள் மீன்பிடி திட்டங்களுக்கு, மீன்பிடி கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை செய்வார்கள் என்று நம்புகிறேன். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பொது விநியோகம் மூலம் இலவச அரிசியை வழங்கி வருகிறது. பருப்பு, உளுந்து, சமையல் எண்ணை போன்றவை நியாய விலை கடைகளில் மானிய விலைக்கு வழங்கி வருகிறது. இதற்காக அரசு பெருந்தொகையை மானியமாக கொடுக்கிறது. அரசின் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் மக்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும் வகையில் திறமையாக கண்காணிக்க வேண்டும்.
உணவு பொருட்கள் வீணாகாமல் மக்களிடம் போய் சேர வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உணவு பொருள் கடத்தலை தடுக்க வேண்டும். கல்வி, குடும்ப நலம் ஆகியவற்றுக்கு அடிப்படை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மக்களுக்கு உடல் நலம் முக்கியம். அவர்களுக்கு சுகாதார பயன் கிடைக்கிறதா? என்பதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். சமீபத்தில் வெளியான புள்ளி விவரப்படி புற்று நோய், nullநீரிழிவு, மாரடைப்பு ஆகியவை அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் சுத்தமாக பேணப்பட வேண்டும். மருத்துவர்கள் தன்னலமின்றி பணிபுரிய வேண்டும். இதில் கலெக்டர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குழந்தைகளும் மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பெற வேண்டும். அவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் எனது அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப் ஆகியவற்றை எனது அரசு வழங்கி வருகிறது. இது மாணவர்களின் கல்வி கற்கும் முயற்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும். சுத்தமான குடிnullநீர், அடிப்படை சுகாதார வசதி, மருத்துவமனை, சிறந்த பள்ளிகள் அமையும் வகையில் கலெக்டர்கள் திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் புதிதாக கட்ட அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடங்களை விரைவில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். கட்டிட பணிகள் தரமாக இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக இருப்பார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
உள்ளாட்சி நிர்வாகிகளுடன், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டப்பயன் மக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் கிடைக்க கலெக்டர்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டும். சுத்தமான குடிநீnullர், தரமான சாலைகள், கிராம சுகாதாரப்பணிகள் போன்றவற்றில் அந்த நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கிராமப்புறங்கள் கழிவு பொருட்களை கொட்டும் இடமாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மழைக்காலம். தேவையான நிவாரண உதவிகள் வழங்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நீnullங்கள் தயாராக இருக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது nullநீங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
ஏழைஎளிய மக்களுக்கு பயன் அளிக்கும் திருமண உதவி திட்டம், முதியோர் பென்ஷன் திட்டம் போன்ற சமூக நல திட்டங்களுக்கு உண்மையான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த திட்டத்தின் முழு பலன் கிடைக்கும். பல திட்டப்பணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு தெரிவித்துள்ளேன். அவற்றை சிறப்பாக நிறைவேற்ற ஒருங்கிணைத்து செயல்பட்டு எனது எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.