முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியில் தான் நாள்தோறும் நலத்திட்டம்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சாத்தூர்,நவ.15 - மாற்றத்தை தந்த மக்களுக்கு ஏற்றத்தை தரவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது என்றும், சாத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலம்பட்டியில் அருகே ஆலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சாத்தூர் ஒன்றிய தலைவர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பயணாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசியதாவது;

இந்திய திருநாட்டில் தமிழகத்தில் மட்டும்தான்விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் அனைத்தும் எளிமையாக நடைபெறுகிறது. நலத்திட்டங்கள் வீடுதேடி வழங்கபட்டு வருகிறது. 

அ.தி.ம.க. ஆட்சியில் மட்டும்தான் நாள்தோறும் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தபட்டு வருகிறது. கிராமபுறங்கள் பொருளாதாரத்தில் மேம்படவே மாணவர்களுக்கு மடிகணினி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு,மாடுகள் மற்றும் தாய்வீட்டு சீதனமாக தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது. மாற்றத்தை தந்த மக்களுக்கு ஏற்றத்தை தரவே, நலத்திட்ட உதவிகள் வழங்கபடுகின்றன. 

சாத்தூர் தொகுதியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. குறிப்பாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சாத்தூர் வைப்பாற்றில் அரசு கலைகல்லூரி, ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை சீரமைக்க ரூபாய் 165 கோடியும் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. 

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்று பேசினார். சாத்தூர் தொகுதியில் 540 பயணாளிகளுக்கு மிக்சி,கிரைண்டர், மின்விசிறிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் வசந்தா அழகர்சாமி, நகர செயலாளர் வாசன், தொகுதி பொறுப்பாளர் சேதுராமனுஜம், சாத்தூர் வட்டாசியர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய ஆணையாளர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுப்புராம், வெம்பக்கோட்டை ஒன்றியதுணை தலைவர் வக்கில் சின்னன் மணிக்கண்டன், மாணவர்அணி தலைவர் யோகஸ்,  செல்வகணேஷ், ராமலிங்கம் மகேஸ், ராமகிஷ்ணன் சண்முககனி, ராஜேந்திரன், கீதா, விராரெட்டி முனியாசாமி, கணேசன், மதுரை விரன் சாத்தூர் ஒன்றிய துணை தலைவர் செல்வராணி மற்றும் கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago