முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. நிருபர் ஆனார் கிளிண்டன் மகள்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், நவ.16 - அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் என்.பி.சி. தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு செய்திகளை செல்சியா அளிப்பார் என்று என்.பி.சி. தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியினரின் மூத்த மகள் செல்சியா. 31 வயதாகும் இவர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சுகாதார படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். கிளிண்டனின் மகள் செல்சியா தனது நீண்ட நாள் தோழரான மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். முதுகலை படிப்பை முடித்தவுடன் மெக்கின்சி அண்ட் கோ என்ற கன்சல்டிங் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள செல்சியா என்.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தின் சிறப்பு செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார். என்.பி.சி. தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மேக்கிங் ஏ டிபரன்ஸ் என்ற நிகழ்ச்சிக்கான சிறப்பு செய்திகளை செல்சியா தருவார் என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் செல்சியாவின் முதல் நியூஸ் கவரேஜ் எப்போது ஒளிபரப்பப்படும் என்பது குறித்து என்.பி.சி. நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை. சிறப்பு செய்தியாளர் பணியில் இணைந்தாலும் தனது தந்தையின் தொண்டு நிறுவன பணிகளையும் அமெரிக்கன் பேலேட் பள்ளியின் நிர்வாக பணிகளையும் கவனித்து வருகிறார் செல்சியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்