முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.18 - சென்னை வேளச்சேரியில் போலி ஆவணம் தயார் செய்து ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஆர்.ராமமூர்த்தி தாயார் ஆண்டாள் என்பவருக்கு சொந்தமான இடம் சுமார் 12 சென்ட் வேளச்சேரி ஸ்ரீநிவாசா நகரில் இருந்தது. மேற்படி ஆண்டாள் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலத்தை சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த தண்டபானி என்பவர், மேற்படி ஆண்டாள் என்பவரின் மகன் என்றும், தான்தான் அதற்கு வாரிசு என்றும், மேற்படி நிலத்தை அபகரிக்க நினைத்து போலியான வாரிசு சான்று எண்ணினை பயன்படுத்தி தன்னுடைய மனைவி தாமரைப்பூ என்பவருக்கு செட்டில்மெண்ட் பத்திரம் ஒன்று போலியாக தயார் செய்துள்ளார்.
எந்தவித ஆதார ஆவணமும் இன்றி வேளச்சேரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பதிவு செய்து மேற்படி ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தினை அபகரித்துள்ளனர். இது சம்பந்தமாக நிலத்தின் உரிமையாளர் ஆர்.ராமமூர்த்தி என்பவர் நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை காவல் ஆணையாளர் திரிபாதியிடம் புகார் மனு அளித்திருந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொள்ளப்பட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி ஆணைப்படி காவல் கூடுதல் ஆணையாளர் அபய்குமார்சிங் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ராதிகா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஜேசுராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர் சுகன்யா மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தண்டபாணி மற்றும் அவருடைய மனைவி தாமரைப்பூ ஆகியவர்களை கைது செய்து போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசராணைக்கு பின் இவர்கள் இருவரையும் சைதாப்பேட்டை 11-வது பெருநகர் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி அவர் உத்தரவின்பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் ஏற்கனவே இவர்கள் மீது போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்றதற்காக 2009-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவல் செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் தாமரைப்பூ என்பவர் மீது வங்கி மோசடி சம்பந்தமாக சி.பி.ஐ.யிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. மேற்படி தண்டபாணி என்பவர் நேஷனல் கோஆப்ரடிவ் டெவலப்மெண்ட் கார்பரேசன் நிறுவனத்தில் டெல்லியில் பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றவர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago