எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.10 - தமிழக சட்டசபை தேர்தலின்போது பண பலத்தை கொண்டும் ரவுடிகளை ஏவி விட்டும் வன்முறையில் ஈடுபட தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் மனு கொடுத்துள்ளது. தமிழகம், புதுவை,கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாமில் 2 கட்டமாகவும் மேற்குவங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே தேர்தலுக்கான ஆயத்த பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபடத்துவங்கிவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. சேர்ந்துள்ளது. அதேசமயத்தில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படாமல் போய்விட்டது. பின்னர் தி.மு.க.வினர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்த பின்னர் தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. இது ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறத்தில் முதலில் தேர்தல் நடக்கும் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. தமிழகத்திற்கு துணை ராணுத்தினர்களும் மத்திய படையினரும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்காக காரில் பணம் கொண்டு செல்கிறார்களா என்பதையெல்லாம் துணை ராணுவத்தினர் சோதித்து வருகிறார்கள். அதாவது தேர்தலில் பணம் விளையாடாமல் இருக்க தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆயத்த பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி தலைமையில் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் கமிஷனர்கள் கலந்துகொண்டனர். மேலும் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை கலந்துகொண்டார். கூட்டத்தின்போது 5 மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. போன்ற கட்சிகள் வலியுறுத்தின.
அ.தி.மு.க. சார்பாக தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி இந்த தேர்தலுக்கு பின்னர் நீடிக்காது. அதை கருத்தில் கொண்டு தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தி.மு.க. வினர் முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த பணத்தை பயன்படுத்தியும் அதிகார துஷ்பிரயோகம் செய்யவும் தி.மு.க. வினர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் தேர்தலின்போது ரவுடிகளின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட செய்யவும் திட்டமிட்டுள்ளனர். கலவரம் நடந்தால் பெண்கள், அப்பாவி மக்கள் பயந்துகொண்டு போய்விடுவார்கள். அதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போடவும் தி.மு.க. வினர் கருதியுள்ளதாக தெரிகிறது. இதை தடுக்க தேர்தல் கமிஷன் தமிழகத்தில் தேவையான இடங்கள், பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தலின்போது தி.மு.க.வினர் பணத்தை நடமாட விட்டும் ரவுகளை ஏவியும் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளோம் என்றார். இதை தடுக்க தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவம்,மத்தியப்படையை அனுப்ப வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.