தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.19 - கடந்த தி.மு.க ஆட்சியில் 3 ஆயிரம் போலி பட்டாக்களை மு.க.ஸ்டாலின், கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புரவலர் ஆர்.போஸ், மாநிலத்தலைவர் ரவிரங்கராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியினை ஒழிக்க லெட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு நியமனம் செய்து அறிக்கையும் பெற்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி நடத்திவருவதற்கு எங்களது தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர்களை நினைவில் வைத்து சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதன் ஒரு கட்டமாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தரமான மடிக்கணினி நகல் எடுக்கும் கருவியுடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் சேர்த்து எங்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி அல்லது புதுக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கும் தேதியில் நன்றியறிவிப்பு மாநாடு நடத்த முடிவு செய்து தீர்மானம் அனுப்பியிருக்கின்றோம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மூத்த அமைச்சர்கள் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கிட முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 16.02.2011 முதல் 28.02.2011 வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வேலை நிறுத்த காலத்தை ஒழுங்குப்படுத்துவதாகக் கூறி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. முக்கிய கோரிக்கையான தர ஊதியம் உயர்த்தியும் உத்தரவிடப்பட்டது. ஆனால் 13 நாள் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே முதல்வர் ஜெயலலிதாவிடம் வேலை நிறுத்தக் காலத்தை ஒழுங்குப்படுத்தி ஊதியப்பயன் கிடைக்க உத்தரவிடக் கோரியுள்ளோம்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம், கழனிவாசல் கிராமங்களில் 3000 மூவாயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாவினை முன்னாள் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட அன்றைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலமையில் வழங்கினார்கள். அதன்பின் மூவாயிரம் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன. 20 கோடிக்கு மேல் அரசுக்கு பணம் செலுத்தி பட்டாக்கள் பெற்று பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். போலிப்பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரியும், தவறு செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தகுதியுள்ளவர்களுக்கு பட்டாக்கள் வழங்கக் கோரியும், போலிப்பட்டா கொடுக்க ஒத்துழைக்காத இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினை, ரத்துச் செய்யக்கோரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு வரும் வண்ணம் 16.12.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வழங்குவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து கிராமங்களுக்கு எடுத்து செல்வதற்கு ஏற்றுக்கூலி, இறக்கும்கூலி மற்றும் உள்செலவினங்களுக்காக 31 மாவட்டங்களுக்கான 37 1/2 கோடி ரூபாய் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போலி வவுச்சர்கள் தயார் செய்து இந்த தொகை முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களால் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடியினை கண்டுபிடித்து விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு அமைக்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டுவர வருகின்ற 30.11.2011 புதன்கிழமை மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் திறந்த வெளிப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு