முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவந்தாங்கலில் தொழிலதிபர் கொலை தலைமறைவான தம்பதிகளுக்கு வலைவீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்

 

சென்னை, நவ.20- சென்னை பழவந்தாங்கலில் வீட்டில் தனியாக இருந்த கொசு வலை தயாரிக்கும் தொழிலதிபர் ஒருவரை கழுத்தை வயரால் இறுக்கி கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. அவரிடம் வேலை செய்த தம்பதிகள் தேடி வருகின்றனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- நங்கநல்லூர் லட்சுமி குடியிருப்பு அபிலாஷ் அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தவர் சந்திரசேகரன்(54). இவருக்கு கவுரி(48) என்ற மனைவியும், ப்ரீத்தி(27) என்ற மகளும் உள்ளனர். கவுரி அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக உள்ளார். மதியம் 1 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 11 மணிக்கு வீடு திரும்புவார். மகள் ப்ரீத்தி வெளியூரில் தங்கி இன்ஜினியரிங் படித்து வருகிறார்.  சந்திரசேகரன் கொசு வலைகளை விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். வேலை வாய்ப்பு ஏஜென்சியும் நடத்தி வருகிறார். கொசு வலைகளை மொத்த விற்பனை செய்வதற்காக தனது குடியிருப்புக்கு அருகிலேயே ஒரு அபார்ட்மென்டை வாடகைக்கு எடுத்து அங்கு தனது அலுவலகத்தை நடத்தி வருகின்றார். இரண்டு அலுவலகங்களும் பரபரப்பாக இயங்குவதால் எந்நேரமும் ஆட்கள் வந்துபோன வண்ணம் இருப்பார்கள். 

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கவுரி தனது வங்கி பணிக்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். உள்ளே விளக்கு எதுவும் எரியாமல் வீடு இருட்டாக இருந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்ட கவுரி விளக்கை போட்டு பார்த்துள்ளார். அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. வீட்டினுள் அவரது கணவர் சந்திரசேகரன் நிர்வாண கோலத்தில் முகத்தில் தலையணை மூடியபடி கிடந்துள்ளார். 

உடனே கவுரி அருகில் சென்று தலையணையை எடுத்து பார்த்தபோது, சந்திரசேகரன் மூக்கிலும், வாயிலும் ரத்தம் வடிய உயிரற்ற உடலாக கிடந்தது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் டெலிபோன், கேபிள் ஒயர் இறுக்கியபடி கிடந்துள்ளது. அவரை யாரோ கேபிள் ஒயரால் கழுத்தில் இறுக்கி தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. உடனே இதுபற்றி கவுரி போலீசில் புகார் அளித்ததன் பேரில் பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்திரசேகரன் உடலை பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சந்திரசேகரனை கொன்றவர்கள் அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட், மோதிரத்தை எடுத்து சென்றுள்ளனர். அதன் மதிப்பு 6 பவுனுக்கு மேலிருக்கும். மேலும் சந்திரசேகரனின் செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளனர். சந்திரசேகரினிடம் 3 தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். கொலை சம்பவத்திற்கு பிறகு அவர்களும் தலைமறைவாகி விட்டனர். ஆகவே கொலைக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்திரசேகர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் பெண் தொடர்பு, கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் செல்போனையும் எடுத்துச் சென்றிருப்பதால் செல்போன் டவரை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியிலும், சந்திரசேகரனின் செல்போன் கால்லிஸ்டை எடுத்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். சந்திரசேகரன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் லிஸ்டையும் எடுத்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago