முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோசய்யா மீது ஆந்திர லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

நகரி,மார்ச்.11 - நிலம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அமீர்கான் பேட்டையில் உள்ள 9.14 ஏக்கர் அரசு நிலத்தை ரோசய்யா தனது நெருக்கமான நண்பர்கள் 13 பேருக்கு மலிவு விலையில் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வக்கீல் மோகன்லால் என்பர் ஐதராபாத் கோர்ட்டில் நில ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரோசய்யா மற்றும் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரோசய்யா மற்றும் 13 பேர் மீது 404, 405,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விரைவில் 13 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ரோசய்யா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ததால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி ரோசய்யா கூறுகையில், அரசு முக்கிய பிரமுகர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு நில ஒதுக்கீடு செய்யலாம் . இது பக்கத்து மாநிலங்களில் கூட கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என் மீது மட்டும் வழக்கு பதிவு செய்திருப்பது என்ன நியாயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்