எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை திகார் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இவ்வாறு இவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் டெல்லி திகார் சிறையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கனிமொழிக்கும், ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஹெச்.எல். தத்தூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 நிறுவன அதிகாரிகளையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனர். யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் வினோத்கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஹரிநாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா ஆகிய 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒவ்வொருவரும் தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 2 உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை நீதிபதி தத்தூ வாசித்தார். முன்னதாக, மேற்கண்ட 5 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி விசாரணை நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இரண்டு நீதிமன்றங்களும் இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்ட நிலையில் மேற்கண்ட ஐவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் சி.பி.ஐ. இவர்களை ஜாமீனில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும். காரணம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே சாட்சிகளை கலைக்க இனி சந்தர்ப்பமில்லை என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் 5 நிறுவன அதிகாரிகளுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் முறையாக இவர்களுக்குத்தான் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனால் தங்களுக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தன்னை ஜாமீனில் விடக் கோரி கனிமொழி தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஏற்கனவே 4 முறை நிராகரிக்கப்பட்டு விட்டன. தற்போது அவர் டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கூட எதிர்க்கவில்லை. எனவே கடந்த முறையே அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஒரு பெண் என்பதற்காக ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்த நிலையில்தான் டெல்லி ஐகோர்ட்டில் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரவிருக்கிறது. கனிமொழி மட்டுமின்றி மேலும் நால்வரின் ஜாமீன் மனுக்களும் டிசம்பர் 1 ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே கனிமொழிக்காக வாதாடும் சில வழக்கறிஞர்களை மாற்றி விட்டு திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, வரும் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரிந்து விடும். அதே வேளையில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு முதல் முதலாக ஜாமீன் கிடைத்திருப்பதால் கனிமொழிக்கு இம்முறை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாதான். பிறகு அவரது அந்தரங்க உதவியாளர் ஆர்.கே. சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் முக்கியமானவராக கருதப்படும் கனிமொழி எம்.பி. மற்றும் அந்த டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். கடந்த மே மாதத்தில் இருந்து கனிமொழி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 7 மாதங்களாக கனிமொழி திகார் சிறையில் இருந்து வருகிறார். அவரை மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தார் மற்றும் கட்சி பிரமுகர்கள் இதுவரை பலமுறை சந்தித்து ஆறுதல் கூறி விட்டனர். அதே போல கனிமொழியும் தன் தந்தைக்கு தன்னை சந்தித்த போதெல்லாம் ஆறுதல் கூறி தேற்றினார். இந்த நிலையில்தான் வரும் டிசம்பர் 1 ம் தேதி அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது உறவினர் ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால், மும்பை திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்