எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.- 24 - பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நேற்று இரண்டாவது நாளாக விலைவாசி உயர்வு, தனித் தெலுங்கானா, கறுப்புப்பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு சபைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. அப்போது விலைவாசி உயர்வு, கறுப்புப்பணம், தனித்தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நேற்று முன்தினம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நேற்று இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின. அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. ராஜ்யசபையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சபையின் மைய பகுதியை நோக்கி விரைந்தனர். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட இடதுசாரி எம்.பி.க்களுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆனால் பா.ஜ.க. எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு போகாமல் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே கறுப்புப்பணம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் தொடர்பாக தாங்கள் கொண்டுவந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபை தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி சப்தம் போட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சபையை நண்பகல் 12 மணிவரை சபைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். இதேபோல லோக்சபையிலும் நேற்று பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. லோக்சபையில் நேற்று கறுப்புப்பணம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை பா.ஜ.க. எம்.பி.க்கள் கொண்டுவந்தனர். தங்களது இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். லோக்சபையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து புறக்கணிக்கப் போவதாகவும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூறினர். தனித் தெலுங்கானா பிரச்சனை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்கவளின் கோஷத்திற்கு ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் எதிர் கோஷங்களை எழுப்பினர். தென்னிந்தியாவில் ஒரு அணைக்கு சேதம் ஏற்படுவது போன்று எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி பல்வேறு கட்சிகளும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி ஆள் ஆளுக்கு கோஷங்களை எழுப்பியதால் சபையில் இரைச்சல் அதிகரித்தது. யார் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழாத அளவுக்கு கூச்சல் அதிகமாக இருந்தது. இதையடுத்து நேற்று நண்பகல் 12 மணி வரை லோக்சபையை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். பிறகு சபை மீண்டும் கூடியபோது, இதே பிரச்சனைகளை முன்வைத்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்ததால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சபை அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து சபை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக ஜார்க்கண்ட் ரயில் தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானதற்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியபிறகுதான் சபை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதால் பாராளுமன்றத்தில் அவரை தொடர்ந்து புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
லோக்சபையில் பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியபோதிலும் மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து அவர்கள் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என்று சபாநாயகர் மீரா குமார் கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விலைவாசி உயர்வு தொடர்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வஃப் திருத்த மசோதா தொடர்பான தேர்வுக்குழு குறித்த தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந