எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, மார்ச் 12 - ஜப்பானில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமிப் பேரலைகளும் எழுந்தன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பூகம்ப இடிபாடுகளிலும், சுனாமி பேரலைகளிலும் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஜப்பான் அமைச்சரவை பிரதமர் தலைமையில் அவரச ஆலோசனை நடத்தி வருகிறது.
பூகோள ரீதியாக தீவு நாடான ஜப்பான் பூகம்ப மண்டலத்திற்குள் இருக்கிறது. இங்கு அடிக்கடி நில நடுக்கங்களும், அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகளும் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் பல்லாயிரம்பேர் பலியானார்கள். இப்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானை தாக்கியது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் சுனாமி பேரலைகள் ஆறு மீட்டர் உயரத்திற்கு சீறிவந்து நிலப்பகுதிக்குள் நுழைந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் பசிபிக் மகாசமுத்திரத்தை ஒட்டியுள்ள ரஷ்யா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிகோ, பெரு, ஹவாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாகி, புகுஷிமா போன்ற முக்கிய நகரங்களை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி பேரலைகள் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நிலப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வழியில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் அனைத்தும் ஏதோ தூசுகள் போல வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பூமிக்கு கீழை 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு சாலைகளிலும், உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். ஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சில இடங்களில் கட்டிடங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கின. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 8.9 ஆக பதிவாகி உள்ளது என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1995 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்றும் அந்த மையம் கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி பேரலை தாக்குதல் காரணமாக டோக்கியோ உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல சாலை போக்குவரத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ நகர் உட்பட பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
பூகம்ப தாக்குதல் காரணமாக ஜப்பானில் உள்ள முக்கியமான அணு மின்சார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த அணு மின்சார நிலையங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இப்படி ஒரு நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளதால் அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையில் ஜப்பான் அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
டோக்கியோ, ஒசாகி ஆகிய நகரங்களில் 30 பேர் பலியானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் மக்கள் தொகை மிகுந்த ஹோன்சு தீவுதான் இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு பூகம்பத்தை தான் தனது வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று ஜப்பான் வாசி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக 900 மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருக்க, நகரின் மையப் பகுதியோ எரிந்துகொண்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்டாய் விமான நிலையம் முழுவதுமாக சுனாமி பேரலைகளால் மூழ்கடிக்கப்பட்டது. சுனாமிக்கு பயந்து விமான நிலையத்தில் இருந்த அனைவரும் விமான நிலையத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மீது ஏறி உயிர்தப்பினர். விமான நிலையத்தின் ஓடுதளங்கள் நீருக்குள் இருக்கின்றன. எண்ணை கிணறுகள் தீப்பற்றி அதிலிருந்து கறும்புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது.
சுனாமி ஏற்பட்டபோது கடலில் இருந்த மீன்பிடி படகுகள், சிறிய கப்பல்கள் ஆகியவை பேரலைகளால் நகருக்குள் கொண்டுவரப்பட்டன. ஜப்பானில் இரு தீவுகளை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் ஆழிப் பேரலைகளால் தாக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
பூகம்பம், சுனாமி இரண்டும் ஒரே நேரத்தில் ஜப்பானை தாக்கியதால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் அதிக அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின்போது 10 ஆயிரம் கோடி டாலருக்கு ஜப்பானில் சேதங்கள் ஏற்பட்டன. பூகம்ப வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திய 1995 ல் ஏற்பட்ட பூகம்பம்தான்.
ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர்கள் சகஜமான சம்பவமாகிவிட்டதால் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே ஜப்பான் கடலோர பகுதிகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை சங்குகள் ஒலித்தன. இதனால் கடலோர பகுதியில் இருந்த மக்கள் பல்வேறு உயிர்காக்கும் வாகனங்கள் மூலம் 5 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலப்பகுதிக்கு சென்று தங்கிவிட்டனர். இதனால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. என்றாலும் பூகம்பம், சுனாமியால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு தற்காலிக மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.