எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.12 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரிடம் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை கிட்டத்தட்ட மூன்றேகால் மணி நேரம் நடந்தது. இந்த விசாரணையால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் முகத்தில் சோகம் நிழலாடியது. விசாரணை நடந்த அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நேர்காணலும் காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டு விவகாரம் தொடர்பான பேச்சும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்படுவதுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலாகும். இந்த ஊழல் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுவதற்கு காரணம் இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பெரும் தொகைதான். இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய் தனது அறிக்கையில் கூறிய பிறகுதான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி சபையையே முடக்க வைத்தனர். இதன் எதிரொலியாக இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய தொலைதொடர்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலகினார். அவர் பதவி விலகினால் போதாது. அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தின. அந்த நேரத்தில் சுப்ரீம்கோர்ட்டும் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் பிரதமருக்கும் சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. சுப்ரீம்கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த ஊழலை விசாரித்து வருகிறது. பதவி விலகிய ராசாவின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் சி.பி.ஐ.விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் சுவான் டெலிகாம் அதிகாரி பால்வா கைது செய்யப்பட்டார். ராசா கைது செய்யப்பட்டபோது அவருடன் சேர்த்து 2 முன்னாள் மத்திய செயலாளர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது ரூ. 214 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறிய விவகாரமும் அம்பலமானது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட டி.பி.ரியால்டி நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்கு பணம் போய் சேர்ந்த விவகாரம் அம்பலமானது. கலைஞர் தொலைக்காட்சியில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் பங்கு தாரர்களாக உள்ளனர். மற்றொரு பங்குதாரர் சரத்குமார் ரெட்டி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் எந்த நேரமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாகவோ என்னவோ காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் கருணாநிதி முன்வந்தார். மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகப்போவதாகவும் தி.மு.க. உயர்நிலைக்குழுவை கூட்டி மிரட்டிப்பார்த்தார் கருணாநிதி. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதற்கு பணிந்ததாக தெரியவில்லை. கடைசியில் தி.மு.க.தான் பணிய நேர்ந்தது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை கொடுக்க முடியாது என்று முதலில் மறுத்த தி.மு.க. 3 நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கேட்ட அதே தொகுதிகளை கொடுக்க முன்வந்தது. ஆனால் திரைமறைவில் பல சம்பவங்கள் அரங்கேறின. ஒரு வழியாக மீண்டும் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனிமொழியிடம் எந்த நேரமும் விசாரணை நடக்கலாம் என்று தினபூமி உள்பட பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
அதன்படி நேற்று கனிமொழியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். முன்னதாக நேற்றுக்காலை 10.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் சென்னை வந்தனர். அவர்கள் கலைஞர் டி.வி. அலுவலகம் அமைந்திருக்கும் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர். முன்கூட்டியே இதுபற்றி தகவல் தெரிந்ததால் கருணாநிதி மகள் கனிமொழியும் காலை 10.35 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து தயாளு அம்மாளும் வந்தார். இருவரும் உள்ளே சென்றனர். இவர்கள் இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் ரூ. 214 கோடி எப்படி வந்தது என்பது குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்துவிட்டார்களாம். இந்த விசாரணை மதியம் 1.45 வரை அதாவது கிட்டத்தட்ட மூன்றேகால் மணி நேரம் இடைவிடாமல் நடந்தது. விசாரணை முடிந்த பிறகு கனிமொழி பிற்பகல் 1.50-க்கு வெளியே வந்தார். ஆனால் நிருபர்களை சந்திக்காமல் அங்கிருந்து பறந்தார் கனிமொழி. அவரை தொடர்ந்து தயாளு அம்மாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தயாளு அம்மாள் இதுவரை கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்ததே இல்லை. ஏன் அறிவாலயத்திற்கு கூட வந்ததில்லை என கூறப்படுகிறது. நேற்று முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்காக அவர் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிடுக்கிப்பிடி விசாரணை குறித்து அறிந்த தி.மு.க. தலைவர்களும் தொண்டர்களும் அதிரச்சி அடைந்தனர். அவர்கள் முகத்தில் சோகம் நிழலாடியது. ஒருவர் முகத்திலும் உற்சாகம் இல்லை.
ஒரே நேரத்தில் 3 நிகழ்வுகள்
அண்ணா அறிவாலயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திய அதே நேரத்தில் தி.மு.க.சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் அக்கட்சி மேலிடம் நேர் காணலும் நடத்தியது. வழக்கமாக காலை 9 மணிக்கு நேர் காணல் நடத்த கருணாநிதி வருவார். ஆனால் நேற்று அவர் சுமார் 10-45 மணிக்குத்தான் வந்தார். அவருடன் ஸ்டாலினும் உடன் வந்தார். இவ்வாறாக தி.மு.க. நேர்காணல் நடந்த அதேநேரத்தில் அதே அறிவாலயத்தில் காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டு பேச்சும் நடந்தது. காலை 11.10-க்கு இருதரப்பினரும் பேச்சை தொடங்கினர். இந்த பேச்சு 12.05 மணிக்கு முடிந்தது. ஆனாலும் சுபமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் 3 நிகழ்வுகள் நடந்தன. அதற்கு முன்பு நேற்றுக்காலை 8 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கோபாலபுரத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பா.ம.க. போட்டியிடும் சில தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதாம். ஆனால் அதை விட்டுத்தர முடியாது என்று கருணாநிதியிடம் ராமதாஸ் கண்டிப்பாக கூறிவிட்டாராம். மொத்தத்தில் நேற்று தி.மு.க.வுக்கு நேரம் சரியில்லையோ என்று சொல்ல தோன்றுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.